என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீசுக்கு தெரியாமல் கொசுவலை வியாபாரி உடல் எரிப்பு
- கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
- ரங்கநாயக் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாயக் (வயது 55). கொசு வலை வியாபாரி. இவர் கடந்த 12-ந் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உரிகம் கிராம நிர்வாக அலுவலர் கிரிஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரங்கநாயக் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கோவில் திருவிழாவில் ஒரு சமுதாயத்தினர் வைத்த பேனரில் தங்களுக்கு வேண்டியவரின் பெயரை அச்சடிக்கவில்லை என கூறி உயிரிழந்த ரங்கநாயக் உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவில் நடக்கும் நாடகத்திற்கு செல்ல கூடாது என முடிவு செய்திருந்தனர்.
ஆனால் அதையும் மீறி ரங்கநாத் நாடகத்தை பார்க்க சென்றதால் அவரை பிடித்து இழுத்து வந்த அவரது உறவினர்கள் தப்பி செல்ல முயன்றதால் அவரை தாக்கியதாவும் அதில் ரங்கநாயக் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்