search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டையர்கள்"

    • அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.
    • சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள்.

    கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் 5 இரட்டையர்கள் உள்ளனர். அந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்ப்பதற்கு அச்சு அசல் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் அந்த இரட்டையர்கள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக உள்ளனர். அவர்களது பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள். இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவியது.

    • மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர்.
    • இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதை கண்ட இரட்டையர்கள்.திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,

    விழுப்புரம்:

    ஏ. டி. எம்., இயந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை திண்டிவனம் புறவழிச்சாலை அருகே, தனியார் ஓட்டல் எதிரே உள்ள ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர். யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார்.

    ஆனால் யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார். ஆனால், 500 ரூபாய்க்கு பதில் ரூ. 10 ஆயிரம் வந்துள்ளதுயுவராஜ் மொபைல் போனுக்கு ரூ. 500 எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதாக கருதிய சகோதரர்கள், திண்டிவனம் போலீசில் 9 ஆயிரத்து 500 ரூபாயை ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்.

    ×