search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பெண்கள் கிரிக்கெட்"

    • விஸ்டன் பத்திரிகை முதல் 5 ஆட்டக்காரர்களின் பட்டியலில் கவுரை குறிப்பிட்டது
    • டைம் பத்திரிகையின் 100 நெக்ஸ்ட் பட்டியலில் கவுர் பெயர் இடம்பெற்றது

    15 வருடங்களாக சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை புரிந்து வருபவர், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (34).

    பெண்கள் டி20 (T20) கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஹர்மன்ப்ரீத்.

    கடந்த பிப்ரவரி மாதம் அவரது சாதனைகளில் ஒன்றாக 150 டி20 போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழ் பெற்றார்.

    மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஸ்மிருதி மந்தானாவுடன் இணை கேப்டனாக தங்க பதக்கம் வென்றார்.

    கிரிக்கெட் சாதனைகளை குறித்த பதிவுகளை வெளியிடும் பிரபல "விஸ்டன்" (Wisden) பத்திரிகை, இவ்வருடத்தின் முதல் 5 கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் பெயரை குறிப்பிட்டது.

    தாக்கத்தை ஏற்படுத்திய முதல் 100 பெண்மணிகள் பட்டியலில் பிபிசி (BBC) செய்தி நிறுவனம் ஹர்மன்ப்ரீத் பெயரையும் சேர்த்தது. அதே போன்று, டைம் (TIME) பத்திரிகை வெளியிட்ட "100 நெக்ஸ்ட்" (100 Next) பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றது.

    பிற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்திய மக்களிடையே பெண்கள் கிரிக்கெட்டிற்கும் ஆர்வம் ஏற்பட வைத்த பெருமைக்குரியவர்களில் ஹர்மன்ப்ரீத் ஒருவர். இவரது சாதனைகள் இந்திய பெண்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு வளர காரணமாக இருப்பதாக விமர்சகர்கள் ஒப்பு கொள்கின்றனர்.

    பஞ்சாப் மாநில மோகா பகுதியை சேர்ந்தவரான ஹர்மன்ப்ரீத் கவுர், நடுத்தர சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். கமல்தீஷ் சிங் சோதி என்பவரிடம் பயிற்சி எடுத்து கொள்ள தொடங்கியதும், ஹர்மன்ப்ரீத்தின் விளையாட்டு பயணம் ஏறுமுகத்தை காண தொடங்கியது.

    கடந்த வருடம் பெண்கள் கிரிக்கெட்டில் புகழ் பெற்ற மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு பெண்கள் கிரிக்கெட்டை அனைத்து வடிவங்களிலும் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்பவர்களில் ஒருவராக ஹர்மன்ப்ரீத் திகழ்கிறார்.

    ஹர்மன்ப்ரீத் இதுவரை 290 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6,500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

    அவ்வப்போது விளையாட்டு மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்துபவராக பார்க்கப்பட்டாலும் விரைவில் பக்குவமுள்ள பவர் ஹிட்டராக (power hitter) கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்ப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDWvENGW
    இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீராங்கனைகள் ரோட்ரிக்ஸ், மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.

    ரோட்ரிக்ஸ் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மந்தனா 24 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மிதலி ராஜ் 44 ரன்களும், பாட்டியா 25 ரன்களும், கோஸ்வாமி 30 ரன்களும் சேர்க்க இந்தியா 49.4 ஓவரில் 202 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    அதன்பின் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். ஸ்கிவர் 44 ரன்களும், நைட் 39 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 136 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனைகள் தீப்தி ஷர்மா, பாண்டே தலா இரண்டு விக்கெட்டுக்களும் பிஸ்ட் நான்கு விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.
    ×