என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india womens team"

    • இந்தியா இடம் பிடித்துள்ள "ஏ" பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உள்ளன.
    • இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ள பேட்டர்கள் உள்ளனர்.

    சார்ஜா மற்றும் துபாயில் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன.

    நேற்று "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகளுடன் பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. பந்து வீச்சிலும் தீப்தி சர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.

    இதனால் முழு பலத்தையும் வெளிப்படுத்தி நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூட விரும்பும். அதேவேளையில் நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்தது. இந்திய அணியை வீழ்த்த முனைப்பு காட்டும். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    "பி" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வங்கதேசம் வீழ்த்தியிருந்தது.

    ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது
    பாகு:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது.  

    மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலாவது சுற்றில் 94.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 

    2-வது தகுதி சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின்தங்கியது. எனினும் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி டென்மார்க்கை எதிர்கொண்டது. 

    இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு 17-5 என்ற புள்ளி கணக்கில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

    ஆண்கள் பிரிவில் ருத்ராங்க்‌ஷ் பட்டீல், பார்த் மஹிஜா, தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடங்கிய இந்திய  அணி வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 10-16 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவிடம் தோல்வியை தழுவியது.

     
    ×