என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்.டி.ஓ. விசாரணை"
- உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
- அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார்.
உடுமலை:
உடுமலை அடுத்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் ஜம்புக்கல் மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது.
பின்னர் நிலத்தை பெற்றவர்கள் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளால் அதில் திறம்பட சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார். அதன் பின்பு அவர் அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்த சூழலில் மலைப்பகுதியில் நிலத்தை கிரையம் பெற்ற தனியார் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி உடுமலை ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 2 தரப்பினரையும் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டிய கவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் ஒரு சிலர் விசாரணைக்கு ஆஜராக வில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்"ஜம்புக்கல் மலை விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதில் உண்மை நிலையை கண்டறிந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியதும் அவசியமாக உள்ளது" என்றனர். இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் சுந்தரம், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர்,பொதுமக்கள் உடனிருந்தனர்.
- தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
- கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குளச்சல் :
குளச்சல் மேலத்தெருவை சேர்ந்தவர் சம்மீல் கான் (வயது 32).இவர் குளச்சல் காந்தி சந்திப்பில் கம்ப்யூட்டர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆயிசா சுமையா (26). இவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. பின்னர் 2-வது முறை கர்ப்பமடைந்த ஆயிசா சுமையாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அவர் 3-வது முறையாக கர்ப்பமடைந்து 8 மாத கர்ப்பிணியானார். வீட்டிலிருந்த ஆயிசா சுமையா நேற்று திடீரென வாந்தி எடுத்தார். வீட்டினர் உடனே அவரை நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆயிசா சுமையாவின் தாயார் நாகர்கோவில் கீழசரக்கல் விளையை சேர்ந்த சகர்பானு குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி. (பொறுப்பு) சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வடமதுரை அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் தீ விபத்தில் புதுப்பெண் இறந்தார்.
- ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வடமதுரை:
வடமதுரை அருகே கல்குளம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி. இவர் செல்போனில் தவறுதலாக வேறு நம்பருக்கு அழைப்பு விடுத்தார். அதில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி(23) என்பவர் பேசியுள்ளார்.
இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கல்குளம் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பால்காய்ச்சுவதற்காக முருகேஸ்வரி அடுப்பை பற்றவைத்தார். அப்போது திடீரென அவரது சேலையில் தீப்பற்றி உடல்முழுவதும் பரவியது. வலி தாங்கமுடியாமல் முருகேஸ்வரி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முருகேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செ்யது விசாரித்து வருகிறார். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்