search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்களுக்கு"

    • ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இணை இயக்குநர் ராஜேந்திரன் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு படைப்பாற்றல் சிந்தனைகள் வளர்த்தல், அன்றாட வாழ்வியலில் கணக்குகளின் பயன்பாடு, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களை அணுகி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முறை ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் புதிய இணைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் 61 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது

    வேப்பந்தட்டை:

    தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பெரம்பலூர் மாவட்ட அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 50 அறிவியல் ஆசிரியர்களுக்கான 2 நாள் பணியிடை பயிற்சி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான பாஸ்கரன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சிவநேசன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல உறவு மேம்பட ஆசிரியர்களாகிய நாம் உயரிய நோக்கத்தில் செயல்பட வேண்டும், என்றார். இப்பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்து பேசினார். பல்கலைக்கழக இயக்குனர் சின்னப்பா, கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சேகர், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இப்பயிற்சி முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் சகாயராஜ் நன்றி கூறினார்.

    • அந்தியூரில் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
    • பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அந்தியூ ர்ஒன்றி யத்திற்கு ட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

    இதில் 130 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    கொேரானா கால கட்டத்தில் மாணவ ர்களின் கற்றலில் இடை வெளி காரணமாக மாணவர்களின் பள்ளி செயல்பாடுகள் குறைந்தது. இதனை ஈடுகட்டும் வகையில், மாணவர்கள் திறனை மேம்படுத்து வதற்காக பல்வேறு உத்தி களை கையாண்டு ஆசிரிய ர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியினை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்து ஆசிரிய ர்களுக்கு அறிவுரை வழங்கி னார்.

    மேலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் லக்குமி நரசிம்மன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராதா கிருஷ்ணன், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பானுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி தேவி மற்றும் சிவராமன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

    பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

    ×