search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பொருட்காட்சி"

    • அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
    • 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி னார். தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்ப ட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பொருட்கா ட்சியானது கோவை மாநகராட்சி, சிறைச்சாலை அணிவகு ப்பு மைதான த்தில் இந்த மாதம் இறு தியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இந்த பொருட்கா ட்சியில் செய்தி -மக்கள் தொடர்புத்துறை உள்பட 27 அரசு துறைகள் சார்பில் தங்கள் துறையின் மூலம் செயல்படு த்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பய ன்பெறும் வண்ணம் அரங்கு கள் அமைக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு மின்வாரியம் உள்பட 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொரு ட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. பொருட்கா ட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தி ல்பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.

    மேலும் கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்து டன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்க ளும், வீட்டு உபயோக பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்ப ட உள்ளது.

    தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக பஸ்கள் செல்லும் வகையில் கூடுதல் பஸ் சேவை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அரசு பொருட்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற 12-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறவுள்ளது.

    சேலம்:

    தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்க–ளுடன் கூடிய சேலம் அரசு பொருட்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சேலம் மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுற–வுத்துறை, வருவாய்துறை, சமூகநலத்துறை, தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், தனியார் அரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இப்பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் 35 நாட்களாக மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் சேலம் அரசுப் பொருட்காட்சியினை இதுவரை பெரியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 1.17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நடை–பெற்று வருகின்ற அரசு பொருட்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற 12-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பொருட்காட்சிக்கு அனைவரும் வருகைதந்து பார்த்து பயனடைய வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கோவையில் நாளை தொடங்குகிறது
    • நிகழ்ச்சியில் எம்.பி, எம்.எல்.ஏ.க்க ள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவை,

    கோவை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்வகையில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

    அதன்படி, இந்த ஆண்டும் நாளை (11-ந் தேதி) சனிக்கிழமை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.பி, எம்.எல்.ஏ.க்க ள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இப்பொருட்காட்சியில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்பட 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத் தப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொ ள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களை காட்சி ப்படுத்தும் வகையிலும் சிறப்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இப்பணிகளை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், பொழுதுபோக்கு அம்சத்துடன் தொடங்க ப்பட உள்ள அரசு பொரு ட்காட்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து க்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

    ×