search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்வாதி"

    • தன் மீது புகார் கூறியிருக்கும் மணீசை மிகச்சிறந்த அதிகாரி என்கிறார் பேடி.
    • பொதுவாக சாதியை மையமாக வைத்து ஒரு பிரச்சினையை கிளப்பினால் உடனே அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டும்.

    தமிழக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருக்கிறார். இவர் கன்னியாகுமரி, கடலூர் மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசு செயலர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து நேர்மையான அதிகாரி என்று அனைத்து தரப்பிலும் மதிக்கப்படுபவர்.

    சென்னை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது தன்னை தலித் என்று இழிவு படுத்தினார் என்று இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மணீஷ் குற்றம் சாட்டி இருக்கிறார். மணீஷ் தற்போது ஈரோடு கூடுதல் கலெக்டராக பணியாற்றுகிறார். சென்னை மாநகராட்சியில் நடந்ததாக ஈரோட்டுக்கு சென்ற பிறகு மணீஷ் புகார் கூறி இருப்பது ஏன் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தன் மீது புகார் கூறியிருக்கும் மணீசை மிகச்சிறந்த அதிகாரி என்கிறார் பேடி.

    பொதுவாக சாதியை மையமாக வைத்து ஒரு பிரச்சினையை கிளப்பினால் உடனே அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ரவிக்குமார் எம்.பி. பேடியின் நேர்மையை பாராட்டி இருக்கிறார். அவர் கடலூரில் கலெக்டராக இருக்கும் போதே அவரை நான் அறிவேன். மிகவும் நேர்மையான அதிகாரி. சாதி, மதம் எல்லாம் பார்க்க மாட்டார். நல்ல நிர்வாகி. அவர் மீது இவ்வாறு புகார் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    என்ன ஏது என்று விசாரிக்காமலேயே குரல் கொடுத்து வரும் அரசியல்வாதிகள் மத்தியில் அதிகாரியின் நேர்மைக்கு துணை நிற்பது பாராட்டுக்குரியது. இப்படித்தான் இருக்கணும் அரசியல்வாதி.

    • இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
    • தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை.

    பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதியாக உமர் ஜாவத் பஜ்வா உள்ளார்.

    முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசு கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும், ராணுவம் உடந்தையாக இருந்தது என்றும் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக செயல்பட பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக இம்ரான்கான் கூறும்போது, "எனது வேட்பாளர்களுக்கு தெரியாத எண்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

    இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.

    இந்த நிலையில் ராணுவம் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ். அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ×