search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைதி ஊர்வலம்"

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.
    • மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர்.

    ஏற்காடு:

    மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மனிதநேய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடத்தினர்.

    இந்த பேரணி ஏற்காடு காந்தி பூங்காவில் தொடங்கி டவுன் மார்க்கெட், பஸ் நிலையம் வழியாகச் சென்று ஒண்டிக்கடை ரவுண்டானா அருகில் உள்ள புறக்காவல் நிலையம் அருகில் நிறை வடைந்தது. அதனைத் தொடர்ந்து ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் மற்றும் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் பேரணி குறித்தும் பேரணி எதற்காக நடைபெற்றது என்று குறித்தும் விளக்கி பேசினர்.

    மேலும் மணிப்பூர் கலவரம் மீது நட வடிக்கை எடுத்து மணிப்பூர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினர். இந்த பேரணியில் ஏற்காட்டில் உள்ள பள்ளி குழந்தைகள், கிறிஸ்தவ சபையை சேர்ந்த தலை வர்கள், இஸ்லாமிய தலை வர்கள், இந்து மத முக்கி யஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களும் கொண்டனர்.

    • அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    கோவை

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

    சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் தொடங்கிய அமைதி பேரணி சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோடு, வி.கே.கே.மேனன் ரோடு வழியாக காந்திபுரம் நகர பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஊர்வலம் வந்தடைந்தது.

    பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன்,கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், சுகாதாரகுழு தலைவர் மாரிச்செல்வன், இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, பேரூர்க்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் , மண்டல நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் , மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் தி.மு.கவினர் வழங்கினர்.

    • கருணாநிதி நினைவு நாளையொட்டி நடந்தது
    • 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் க.தேவராஜ் எம்எல்ஏ அமைதி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் எம்எல்ஏக்கள் நல்லதம்பி வில்வநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம் கே ஆர் சூர்யகுமார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா, ஒன்றிய குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமுருகன், சத்யா சதீஷ்குமார், உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமாேனா கலந்து கொண்டனர்.

    ×