search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி கைது"

    • கண்ணூர் மாவட்டம் பையனூர் பேரூராட்சியில் கட்டிட ஆய்வாளராக பணிபுரிபவர் பிஜூ.
    • லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விண்ணப்பதாரர் புகார் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் பேரூராட்சியில் கட்டிட ஆய்வாளராக பணிபுரிபவர் பிஜூ. இவரிடம் பையனூர் பகுதியை சேர்ந்த ஒருவர், புதிதாக கட்டப்பட்ட தனது வீட்டுக்கு கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

    கட்டிட அனுமதி சான்றிதழ் தருவதற்கு அந்த விண்ணப்பதாரரிடம்,ரூ.25 ஆயிரம் லஞ்சம் தருமாறு கட்டிட ஆய்வாளர் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விண்ணப்பதாரர் புகார் செய்தார். அவர்களது கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கட்டிட ஆய்வாளர் பிஜூவிடம் அவரது அலுவலகத்துக்கு சென்று வழங்கினார். அப்போது அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்பு அவரை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
    • சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுரடி நிலம், ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. கோவில் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி புலனாய்வு குழு அமைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து 2 பிரிவாக நிலங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த அப்போதைய தாசில்தார் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதன்பின் 2 அதிகாரிகளும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். இருவரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை புதுவைக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமறைவாக உள்ள மற்றொரு அதிகாரி ரமேசை தேடி வருகின்றனர். தற்போது பாலாஜி மீன்வளத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். நில மோசடி வழக்கில் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இளநிலை என்ஜினீயர் சந்திரசேகர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை, சிட்லபாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை என்ஜினீயராக சந்திரசேகர்(47) வேலை பார்த்து வந்தார். கடந்த 9-6-2009 அன்று அந்த பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தான் புதியதாக கட்டியுள்ள வீட்டுக்கு 3 பேஸ் மின் இணைப்பு கேட்டார்.

    அதற்கு இளநிலை என்ஜினீயர் சந்திரசேகர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரசேகரன் இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    போலீசாரின் ஆலோசனைபடி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை மின்வாரிய அதிகாரி சந்திரசேகரிடம் வழங்கினார்.

    மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயஸ்ரீ மின்வாரிய அதிகாரி சந்திரசேகரனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது.
    • தற்போது திருப்பணி நடத்த முடிவு செய்து, அதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் உதவியையும் பெற்றுள்ளனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் தீர்த்தம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் குணமடைவதாக ஐதீகம். இக்கோவிலின் பரம்பரை நிர்வாகியாக பிச்சுமணி என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதற்கிடையே கோவிலில் திருப்பணிகளை நிறைவேற்றுவதற்காக மூர்த்தீஸ்வரி என்ற ஒரு பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது திருப்பணி நடத்த முடிவு செய்து, அதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் உதவியையும் பெற்றுள்ளனர். இருந்தபோதிலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான நிபுணர் குழு கமிட்டியில், ஆய்வறிக்கை ஒன்றையும் பெற்று, அதை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த ஜூன் மாதம், குணசீலம் கோவிலை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனால் அதற்கான அறிக்கை வழங்கப்படவில்லை. இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் அந்த குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அந்த குழுவில் இடம்பெற்றிருந்த பெண் அதிகாரியான மூர்த்தீஸ்வரி கோவில் அறங்காவலரிடம் அறிக்கை வழங்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அறங்காவலர் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, 5 லட்ச ரூபாய் கொடுங்கள் போதும் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, முதலில் ரூ.1 லட்சம் பணம் தருவதாகவும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் விடுதியில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் பிச்சுமணி, மூர்த்தீஸ்வரியிடம் கூறியுள்ளார். அதன்படி பணத்தை வாங்கவந்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருச்சி காஜாமலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடததினர். அப்போதுதான், இவர் அதிகாரியாக பணியாற்றிய பல கோவில்களில் திருப்பணி வேலைகள் நடக்க அரசின் நிதியுதவியை பெற்றுத்தருவதற்கான அறிக்கை வழங்க லஞ்சம் கேட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

    மேலும் அவரது காரை சோதனை செய்த போலீசார் அதில் மறைத்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வரும் பெண் அதிகாரியான மூர்த்தீஸ்வரி லஞ்சம் வாங்கி சிக்கியது அறநிலையத்துறையினரிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×