search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத ஆண் பிணம்"

    • ஆண் உடல் மிதந்து செல்வதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர், தேவனம்பாளையம் அரசு விதைப்பண்ணை அருகே செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதந்து செல்வதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த உடலை மீட்டனர். சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் பனியன் மற்றும் டிராயர் அணிந்த நிலையில் கிடந்தார். மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து மேலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்தார்.

    திருச்சி:

    திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிந்தாமணி தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்,எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


    ×