search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unidentified male corpse"

    • உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்தார்.

    திருச்சி:

    திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிந்தாமணி தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்,எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


    வல்லம் அருகே அடையாளம் தெரியாத 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வல்லம்:

    வல்லம் அருகே உள்ள முன்னையம்பட்டி கிராமத்தில் திருச்சி- தஞ்சை சாலையோரம் அடையாளம் தெரியாத 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே வல்லம் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். 

    அதில் அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டனர். இது பற்றி விசாரித்ததில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது பற்றிய எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. 

    இதையடுத்து அவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்ட அள்ளி பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள மாரண்ட அள்ளி பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த பகுதி பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    இது குறித்து அந்தபகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மாரண்டஅள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆர்.சி. சர்ச் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. பணியில் இருந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் இறந்தவரை பார்த்ததும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாதவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் கட்டம் போட்ட லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    ×