search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்"

    • மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் வருகிற மே 12-ந் தேதியன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் , தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கிளை மற்றும் வட்டங்களில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்,

    வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் பூத் வாரியாக பெண்கள் குழு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

    அதில் நிர்வாகிகள் 9 பேர் செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் உறுப்பினர்கள் என 25 நபர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் பூண்டி பிரகாஷ் உள்பட நகர , ஒன்றிய , பேரூர் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சமரசம், முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சில் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது. அ.தி.மு.க., பொன்விழா நிறைவு மற்றும் 51-&ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க., அரசை கண்டிப்பது. அண்ணாவின் கொள்கைக்கு எதிராக இந்துக்களை இழிவாக பேசி வரும் தி.மு.க., எம்.பி., ராசாவை வன்மையாக கண்டிப்பது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்குச் சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் கல்பனா, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மக்பூல், மாவட்ட மீனவரணி செயலாளர் புகழேந்தி, மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×