search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட   அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
    X

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    • நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பொன்விழா நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சமரசம், முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சில் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது. அ.தி.மு.க., பொன்விழா நிறைவு மற்றும் 51-&ம் ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க., அரசை கண்டிப்பது. அண்ணாவின் கொள்கைக்கு எதிராக இந்துக்களை இழிவாக பேசி வரும் தி.மு.க., எம்.பி., ராசாவை வன்மையாக கண்டிப்பது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்குச் சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் கல்பனா, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மக்பூல், மாவட்ட மீனவரணி செயலாளர் புகழேந்தி, மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×