search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men killed"

    தஞ்சையில் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக அதே கயிற்றால் கழுத்து இறுகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணையன் மகன் கார்த்திகேயன் (வயது22). தொழிலாளி. திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் உடையவராம்.

    இந்நிலையில் நேற்று குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன் திடீரென வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திகேயனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர் களின் ஆலோசனைப்படி அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று இரவு கொண்டு வந்து சேர்த்தனர்.

    இந்நிலையில் அதிகாலை உறவினர்களுக்கு தெரியாமல் கார்த்தி கேயன் ஆஸ்பத்திரியை விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அவர் அங்கிருந்து தப்பி முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் எங்கே வெளியில் சென்று மீண்டும் தற்கொலைக்கு முயல்வாரோ? என்ற அச்சத்தில் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒரு தூணில் கார்த்திகேயனை கயிற்றால் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது உறவினர்கள் அங்கில்லாத நேரத்தில் கயிற்றை விடுவித்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால் எதிர் பாராதவிதமாக ஏற்கனவே தூக்குமாட்டிய போது கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் கயிறு சிக்கிக் கொண்டு கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சுத்திணறிய கார்த்திகேயன் பரிதாபமாக இறந்துள்ளார்.

    பின்னர் கார்த்திகேயனின் உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவக்கல்லூரி வளாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக அதே கயிற்றால் கழுத்து இறுகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பஸ்சில் தொங்கியபடி சென்ற வாலிபர் சுங்கசாவடி தடுப்பு கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை பெரியகடை வீதியை சேர்ந்தவர் குமார். டெய்லர். இவரது மகன் கார்த்தி (வயது 18). இவர் தஞ்சாவூரில் வேலை பார்த்து வந்தார். 

    தினமும்பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இன்றும் வழக்கம் போல் தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறி வேலைக்கு சென்றார். பஸ்சில்  கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. 

    பஸ் இன்று காலை 9 மணியளவில் கந்தவர்க்கோட்டை புதுநகர் அருகே உள்ள சுங்கசாவடியை கடந்து சென்றது. அப்போது கார்த்திக்கின் தலை எதிர் பாராதவிதமாக அங்கிருந்த தடுப்பு கம்பியில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு கார்த்தி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கார்த்தி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தி வருகிறார். 
    திருச்சி அருகே அக்காவை காதலித்த ஆத்திரத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து வாலிபரை குத்திக்கொன்ற பிளஸ்-1 மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள கணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் விஜய் (வயது 23). பாலிடெக்னிக் படித்து விட்டு திருச்சியில் ரெயில் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை ஜீயபுரம் அருகே பழூர் செல்லும் சாலையில் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள தோப்பில் விஜய் மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறிய நிலையில் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமரா ஜன், போலீசார் விசாரணை நடத்தினர். விஜயை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்கள் யார்? இதற்கு காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.

    அப்போது காதல் பிரச்சனையில் விஜய் காதலித்த பிளஸ்-2 மாணவியின் தம்பியே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. விஜய் திருச்சிக்கு வேலைக்கு வரும் போது பஸ்சில் தன்னுடன் வந்த பழூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார்.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் அந்த மாணவியை தினமும் விஜய் அழைத்து செல்வது என இருந்துள்ளார். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு குடும்பத்துக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திருச்சியில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் விஷ்வா விஜய் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று விஜய்யின் நண்பர் பிறந்த நாள் விழா பழூரில் நடந்துள்ளது. இதில் கலந்துகொண்டு விட்டு, காதலியையும் பார்த்து வரலாம் என விஜய் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அதன்பிறகு மாலையில் பழூர் சாலை வழியாக மீண்டும் தனது ஊரான கணவனூருக்கு திரும்பியுள்ளார். அப்போது பழூர் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தோப்பில் விஜய் காதலிக்கும் மாணவியின் தம்பி விஷ்வா நண்பர்களுடன் இருந்துள்ளார்.

    விஜய்யை பார்த்த விஷ்வாவிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த அவர்கள் தோட்டத்திற்குள் அழைத்து விஜயுடன் தகராறு செய்துள்ளனர். திடீரென விஜய்யை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஷ்வா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தேங்காய் பறிப்பதற்காக தென்னைமரத்தில் ஏறிய வாலிபர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    திருவெண்ணைநல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 23). இவர் வீட்டுக்கு தேவையான தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னைமரத்தில் ஏறினார். அங்கு தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×