search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tn election 2019"

    அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் வாக்களித்த பின் கூறியுள்ளார். #anbumaniramadoss #admk #election2019
    திண்டிவனம்:

    திண்டிவனத்தில் மாரியம்மன்கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் இன்று காலை வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபெற்ற பாராளு மன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 39 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளது. வலிமையான பாரதம், வளமான தமிழகம் அமைப்பதற்காக மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதா செய்திகள் வருகின்றன.

    எங்களது கூட்டணி பாட்டாளி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக உள்ள கூட்டணி. எதிர்கட்சியினர் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள கூட்டணி. தமிழகத்தில் நடைபெறும் 22 சட்டசபை இடைத்தேர்தலில் மிகபெரிய வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி தொடர்ந்து நிலையாக நீடிக்கும். எங்கள் கூட்டணி தமிழகத்தில் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய வெற்றியை பெறும்.
     
    வேலூரில் பாராளுமன்ற தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உள்ளது. இதன் மூலமாக தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரிகிறது. வேலூரில் எதிர் அணியினருக்கு சொந்தமான பணம் கைப்பற்றபட்டது குறித்து எந்தந்த வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட இருந்தது குறித்து அறிக்கையை சமர்பித்த பின்புதான் வேலூர் பாராளுமன்ற தேர்தலை ரத்து செய்தது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்னணு வாக்கு எந்திரம் நம்பகத்தன்மையற்று உள்ளதா என அன்புமணி ராமதாசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்த போது, இந்த தேர்தல் நேரத்தில் இதுகுறித்து தற்போது பேச தேவையில்லை, இருந்த போதிலும் வாக்கு அளித்தேன். விவிபேட் எந்திரத்தில் சின்னம் தெளிவாக இருந்தாலும், உலக நாடுகள் அளவில் வாக்குசீட்டு முறையை பயன்படுத்தி வருகின்றனர். வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் மாற்றங்களை கொண்டு வரலாம் என்றார். #anbumaniramadoss #admk #election2019
    சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி வேலூர் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். #acshanmugam #admk #parliamentelection

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. ஆனால் இன்று நடக்க இருந்த வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் மட்டும் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அவமானம்தான். மக்கள் ஓட்டுப்போடாமல் போனது துரதிஷ்டவசமானது.

    தேர்தல் நடத்துவது குறித்து எங்கள் வக்கீல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் கமி‌ஷனுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். வரும் மே மாதம் 19-ந் தேதி தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுடன் நிறுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும்.

    ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து அங்கேயும் இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தேவையில்லாமல் வருமான வரித்துறையினருடன் உரசல் ஏற்படும். வருமான வரித்துறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் விரைவில் நடக்கும். தி.மு.க. வேட்பாளர் செய்த தவறால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் கமி‌ஷன் தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடியது. அவர்களின் முடிவுக்கு பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு. இந்த தேர்தலை ரத்து செய்தது ஒரு வகையில் தி.மு.க.வுக்கு சாதகமானதுதான்.

    பெரிய தோல்வியில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே தாமதம் செய்யாமல் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று காலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி ஆரணி கொசப்பாளையத்தில் ஏ.சி.சண்முகம் ஓட்டு போட்டார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் பேச முடியாமல் கண்கலங்கினார். பின்னர் நிறுத்தபட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி நடத்த வேண்டும் என்றார். #acshanmugam #admk #parliamentelection

    தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #ministermrvijayabaskar #admk #TNElections2019

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் வடிவேல்நகர் அரசு உயர் நிலைபள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 130-வது வாக்குச்சாவடியில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கிறது. எங்கள் வேட்பாளர் தம்பிதுரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது.

    கரூர் பாராளுமன்ற தொகுதி பதற்றமான தொகுதி கிடையாது. அமைதியான தொகுதிதான். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் பொது விடுமுறையையடுத்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நேரங்களில் 3, 4 நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணி நாள் என்பதால் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு ஒரே நேரத்தில் புறப்பட்டனர். இதனால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாதது. சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்கு சிரமம் இருக்காது. அதற்கேற்றாற் போல் . பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #admk #TNElections2019 

    ×