search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruninravur"

    தீ விபத்தால் வீட்டிலிருந்த பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள அனைத்து பொருட்கள் எரிந்து நாசமாயின.

    ஆவடி:

    திருநின்றவூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் எம். ஜி.பாஸ்கர். தி.மு.க. பிரமுகர்.

    இவரது வீட்டில் முதல் மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எம். ஜி.பாஸ்கர், அவரது மகன் பிரபு மற்றும் குடும்பத்தினர் உடனே வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

    இதுகுறித்து உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை, திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிவதால் தீயை கட்டுப்படுத்த நீண்ட நேரமாக போராடி வருகின்றனர்.

    இந்த தீவிபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென எரிந்து வருவதால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    வீட்டில் இருந்தவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தால் வீட்டிலிருந்த பிரிட்ஜ், ஏசி ,வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள அனைத்து பொருட்கள் எரிந்து நாசமாயின.

    திருநின்றவூர் போலீசார் விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    திருநின்றவூரில் குடிநீர் நிறுவனத்துக்கு எந்திரம் கொடுப்பதாக ரூ.7½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 26-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவர் திருநின்றவூர் கொசுவம் பாளையத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் எந்திரம் வாங்குவதற்காக நூம்பல் சூசையா நகர் மகாத்மா காந்தி ரோட்டைச் சேர்ந்த பாலேஸ்வர் சிங் என்பவரை அணுகினார்.

    அப்போது அவரிடம் எந்திரம் வாங்க இரண்டு தவணையாக ரூ. 7 லட்சத்து 50ஆயிரத்தையும் தயாளன் கொடுத்தார். இந்த நிலையில் எந்திரங்களை சப்ளை செய்யாமல் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து பாலேஸ்வர் சிங் காலம் தாழ்த்தி வந்தார்.

    இதுகுறித்து தயாளன் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பாலேஸ்வர் சிங்கை கைது செய்தனர்.

    கைதான பாலேஸ்வர் சிங் இதே போல் எம்.கே.பி. நகர், வடபழனி, போரூர் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் எந்திரங்கள் சப்ளை செய்வதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திருநின்றவூரில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    திருநின்றவூர் கலர் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சூப்பர் வைசராக திருவள்ளூரை சேர்ந்த ரகுபதி பணியாற்றி வருகிறார்.

    மதியம் மதுக்கடையை திறக்க வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் தரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த பணப் பெட்டியை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று இருந்தனர்.

    இது குறித்து திருநின்றவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக மதுக்கடை ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.

    ×