search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்கூடு"

    ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கியது. இதையொட்டி தர்காவை சுத்தம் செய்ய மீனவ பெண்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கப்பட்டது. திருவிழாவையொட்டி இந்து சமுதாய மீனவ பெண்கள் தண்ணீரை கொண்டு வந்து ஏர்வாடி தர்காவை சுத்தம் செய்வது காலம்காலமாக நடந்து வருகிறது.

    இதன்படி நேற்று மீனவ பெண்கள் கடல்நீரை குடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து வந்து தர்காவில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். விழாவில் வருகிற 11-ந் தேதி மாலை கொடியேற்றம் நடைபெறுகிறது. 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    30-ந் தேதி மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது என்று ஏர்வாடி ஹத்தார் நிர்வாக சபையின் கமிட்டியாளர்கள் தகவல் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பக்கீர் சுல்தான், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் தலைமையில் முன்னாள் தலைவர் அம்ஜத் உசேன், தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் உறுப்பினர்கள், உலமாக்கள் ஆகியோர் முன்னிலையில் பலர் கலந்து கொண்டனர்.
    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

    சந்தனக்கூடு திருவிழா இன்று ஜூன் 1-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு விழா தொடங்குகிறது. இதையொட்டி இந்து சமுதாய மீனவர்கள் கொடுத்த கடல் நீரால் இன்று காலை தர்கா மண்டபத்தை சுத்தம் செய்தனர்.

    வருகிற 11-ந்தேதி கொடியேற்றம், 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந் தேதி அதிகாலை பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றம் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர்சுல்தான் லெப்பை, செயலாளர் சிராஜுதீன் லெப்பை, துணை தலைவர் சாதிக் பாட்ஷா லெப்பை மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்கள், தர்ஹா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
    7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ்பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும். 

    இந்த விழாவை 7 ஆண்டுகளுக்கு முன்பு தர்கா ஹக்தர்களால் தேர்வு செய்யப்படும் நிர்வாக குழு நடத்தி வந்தனர். இடையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக நிர்வாகிகள் தேர்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் கோர்ட்டு மூலம் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவருடைய மேற்பார்வையில் சந்தனக்கூடு திருவிழா நடந்து வந்தது. 

    தற்போது பக்தர்கள்   ஒன்றிணைந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இதனால் 7 ஆண்டுகளாக நடந்த இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். புதிய நிர்வாகிகள் தலைமையில் வருகிற 28-ந் தேதி ஹக்தார்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையின் 2022-ம் ஆண்டு புதியதலைவராக பாக்கிர் சுல்தான் லெவ்வை, செயலாளராக சிராஜுதீன் லெவ்வை, உதவி தலைவராக சாதிக் பாட்ஷா லெவ்வை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

    நிர்வாகக்குழு உறுப்பினர்களாக முதல் கிளையில் செய்யது சிராஜுதீன், செய்யது இப்ராஹீம் சோட்டை எஸ் பாதுஷா, ஹுஸைன், செய்யது இஸ்ஹாக்அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், 2-ம் கிளை பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுராஹிம்அமிர் ஹம்ஸா,3-ம் கிளை சித்திக்லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா லெவ்வை, கனி லெவ்வை, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    ×