search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தர்கா
    X
    தர்கா

    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி கந்தூரி விழா

    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது. நேற்று நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.
    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது.

    கடந்த 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிலம்பு விளையாட்டுடன் பால்குட ஊர்வலம் நடந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு கொடிசுற்று வரி வசூல், மாலை 3 மணிக்கு அரபி மதரஸா நிகழ்ச்சிகள், இரவு 9.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நடைபெற்றது. நேற்று காலையில் நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.

    போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரஹ்மான் பரிசு வழங்கினார். இமாம்கள் முகம்மது ஆலிம், முகம்மது சபீக் ஆகியோர் மார்க்க சொற்பொழிவு வழங்கினர். கந்தூரி கமிட்டி ஆலோசகர் மொய்த்தீன் வரவேற்று பேசினார். கந்தூரி விழாக் கமிட்டி நிர்வாகிகள் உட்பட திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் யூனூஸ் மீரான் மற்றும் புதுமனை ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×