search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா
    X
    முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை சார்பில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா

    பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. மவுலீது ஓதும் நிகழ்ச்சி பனைக்குளம் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் மற்றும் ஜமாத் தார்கள் முன்னிலையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று கந்தூரி தேங்காய் சாதம் வழங்கப்பட்டது.

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபைத் தலைவர் சிராஜுதீன், செய லாளர் பலீல் அகமது மற்றும் ஜமாத் நிர்வாகிகள், முஸ்லீம நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது, ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கந்தூரி விழா கமிட்டி தலைவர் ரோஸ் சுல்தான் உள்பட ஐக்கிய முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தொழுகைக்கு பின்பு முகைதீன் ஆண்டகை பற்றி சொற் பொழிவு ஆற்றி மக்கள் நலனுக்காகவும் சிறப்பு துவா செய்தார்.

    இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர். பனைக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பணிகளை செய்திருந்தனர். ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×