என் மலர்
நீங்கள் தேடியது "sydney test cricket"
- இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் நாளைய டெஸ்டில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
- இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
- இந்திய அணியில் ரோகித்துக்கு பதிலாக சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
ஏற்கனவே இந்தப் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- தற்போது நடைபெறும் ஒரு போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன்.
- எப்போது ஓய்வுப்பெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.
இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக ஆகியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது பேட்டி அளித்த ரோகித் சர்மா,
சிட்னி போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. ஓய்வு தேவைப்பட்டதால் விலகினேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது. ஃபார்மில் இல்லாததாலேயே. சிட்னி போட்டியில் இருந்து விலகினேன். மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன். டெஸ்ட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. நான் எங்கும் செல்லவில்லை, இங்கு தான் இருக்கிறேன். பும்ராவின் கேப்டன்ஷிப் பாராட்டத்தக்கதாக சிறப்பாக தான் உள்ளது.
மைக், லேப்டாப் அல்லது பேனா வைத்திருக்கும் யாரோ ஒருவர் சொல்வது உங்கள் வாழ்க்கையை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். எப்பொழுது செல்ல வேண்டும், எப்பொழுது விளையாட கூடாது, எப்பொழுது Dugout-ல் உட்கார வேண்டும், எப்பொழுது கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. நான் அனுபவம் உள்ளவன், இரு குழந்தைகளின் தந்தை, என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
முன்னதாக, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரங்களில் ஆல் அவுட் ஆனது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்தார். மயாங்க் அகர்வால் 77 ரன்களும், ஜடேஜா 81 ரன்களும் அடித்தனர்.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி பிரிந்தபின்னர் ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. மார்ஷ் (8), லபூஸ்சாக்னே (38), ஹெட் (20) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ் ஜோடி விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாக போராடியது. #AUSvIND #SydneyTest