search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surveyor"

    • பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.
    • நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    விவசாயி வீரசேனன் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து வருகிறது. பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பல இடங்களில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை உடனடியாக போக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில்,

    கூட்டுறவு சங்க ங்களில் உடனடியாக விவசாயிகளுக்கு கடன் மற்றும் உரம் வழங்க வேண்டும், ஒரத்தநாடு நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    இவர்களை இடமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    • சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணே சன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நி லத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயி ரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வைத்தீஸ்கு மாரை மேலம் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    ரு. 2 ஆயிரம் லஞ்சம்

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அத்திமரபட்டி பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வைத்தீஸ்குமாரை பொறி வைத்து பிடிப்பதற்காக திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணேசிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    அந்த பணத்துடன் சங்க–கிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் வைத்தீஸ்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் வைத்தீஸ் குமாரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சிறையில் அடைப்பு

    இதையடுத்து, கைது செய்யப்பட்ட வைத்தீஸ்கு–மாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த வைத்தீஷ்குமார் நேற்று 3-ம் ஆண்டு தொடக்க நாளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 4 ஆண்கள் சிறை தண்டனை விடுத்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    திண்டுக்கல்:

    பழனி அருகில் உள்ள சின்னகலையம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டு மனையை அளவீடு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு நெய்க்கா ரபட்டி பிர்கா சர்வேயர் வெற்றிவேலை அணுகினார். அப்போது அளவீடு செய்து பட்டா மாறுதல் தருவதற்கு பரிந்துரை செய்ய ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். சுப்பிரமணி இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவிக்கவே வெற்றிவேலை கையும் களவுமாக அவர்கள் கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும், சிறப்பு நீதிபதியுமான நம்பி தீர்ப்பு அளித்தார்.

    ஊழல் தடுப்பு சட்டம் 1988 சட்டப்பிரிவு 7 மற்றும் 13-க்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    ×