search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கலெக்டரிடம், விவசாயிகள் மனு
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கலெக்டரிடம், விவசாயிகள் மனு

    • பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.
    • நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    விவசாயி வீரசேனன் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து வருகிறது. பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பல இடங்களில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை உடனடியாக போக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில்,

    கூட்டுறவு சங்க ங்களில் உடனடியாக விவசாயிகளுக்கு கடன் மற்றும் உரம் வழங்க வேண்டும், ஒரத்தநாடு நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.

    இவர்களை இடமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    Next Story
    ×