search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bought"

    • பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
    • நேற்று மாலையில் பெய்த மழை முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்–களுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    சேலத்தில் கடந்த சில நாட்களாக 96 முதல் 98 பாரன்ஹீட் வெயில் நிலவியது. இந்த கோடை வெயிலினால் பொதுமக்கள், வீடுகளில் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் வெப்ப மிகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பமாக இருந்தாலும் இரவில் குளிர்ந்த காற்றும், சாரல் மழையாகவும் இருக்கிறது. நேற்று மாலையில் பெய்த மழை முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் சேலம், ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், அயோத்தியாப்–பட்டணம், வாழப்பாடி, காடையாம்பட்டி, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. சாலைகள், தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து இன்று காலையில் வானம் மேக மூட்டத்துடனே காணப்படுகிறது. இந்த மழையால் விவசாயி–கள் மகிழ்ச்சி அடைந்துள்ள–னர். விளை நிலங்களில் சாகு–படி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை சற்று உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விபரம் வருமாறு:-

    கரியகோவில் -55, ஆணைமடுவு-28, தலைவாசல்- 19, ஆத்தூர்-16, ஏற்காடு-15.6, பெத்தநாயக்கன்பாளையம் -13, சேலம்-12.6, வீரகனூர்-9, காடையாம்பட்டி -8, தம்மம்பட்டி-7, ஓமலூர்-7, கெங்கவல்லி-5, மேட்டூர்-3.2, எடப்பாடி-3, சங்ககிரி-2.2 மீல்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

    • லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது.
    • நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காளியூரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் கணேசன் (வயது 50). இவருக்கு சொந்தமான கஸ்தூரிபட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக் கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார்.

    ரு. 2 ஆயிரம் லஞ்சம்

    அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவைத் துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அத்திமரபட்டி பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்குமார் (வயது 40) ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வைத்தீஸ்குமாரை பொறி வைத்து பிடிப்பதற்காக திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணேசிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    அந்த பணத்துடன் சங்க–கிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் வைத்தீஸ்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் வைத்தீஸ் குமாரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சிறையில் அடைப்பு

    இதையடுத்து, கைது செய்யப்பட்ட வைத்தீஸ்கு–மாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த வைத்தீஷ்குமார் நேற்று 3-ம் ஆண்டு தொடக்க நாளில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    ×