search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail sentences"

    லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 4 ஆண்கள் சிறை தண்டனை விடுத்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    திண்டுக்கல்:

    பழனி அருகில் உள்ள சின்னகலையம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டு மனையை அளவீடு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு நெய்க்கா ரபட்டி பிர்கா சர்வேயர் வெற்றிவேலை அணுகினார். அப்போது அளவீடு செய்து பட்டா மாறுதல் தருவதற்கு பரிந்துரை செய்ய ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். சுப்பிரமணி இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தெரிவிக்கவே வெற்றிவேலை கையும் களவுமாக அவர்கள் கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும், சிறப்பு நீதிபதியுமான நம்பி தீர்ப்பு அளித்தார்.

    ஊழல் தடுப்பு சட்டம் 1988 சட்டப்பிரிவு 7 மற்றும் 13-க்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    ×