search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speaker vaithilingam"

    புதுவையில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கவர்னரை மாற்ற வேண்டும் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Kiranbedi #PuducherryPolitical
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி தலைவர்கள் கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13-ந்தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் புதுவையில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    3 பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நிர்வாகம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

    புதுவை கவர்னர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார். கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சர், கவர்னருக்கு இங்கு தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.

    ஆனால் அந்த கடிதத்தை கவர்னர் கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாத நிலையில் முதல்-அமைச்சர் தனது சக அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கடந்த 13-ந்தேதி முதல் கவர்னர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கவர்னர் மாளிகையை நோக்கி குவியத் தொடங்கினார்கள்.

    மோசமான சூழ்நிலை நிலவியதை அறிந்த நான் நேரடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்தேன். மேலும் எனது கருத்துக்களையும் கூறி பத்திரிகை மூலமாக கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

    நான் இந்த பிரச்சனை சம்பந்தமாக நடுநிலையாளராக இருந்து சமரசம் செய்ய தயாராக இருக்கிறேன். பொதுமக்கள் நலன் கருதி இந்த பணியை செய்கிறேன் என்று கூறினேன்.



    தற்போது இந்த பிரச்சனை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நான் கவர்னரை சந்தித்தேன். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் உச்சகட்ட உணர்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இப்போது மாறி இருக்கிறது.

    இந்த சூழ்நிலையிலும் கவர்னர் இதில் கவனம் எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் புதுவை மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை.

    இப்போது இதில் அடுத்த கட்டமாக ஒரு இக்கட்டான நிலை உருவாகி இருக்கிறது. இங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று கவர்னர் திடீரென மாளிகையில் இருந்து வெளியேறி சென்று விட்டார்.

    இனி 21-ந்தேதி தான் இங்கு திரும்ப இருப்பதாக நான் அறிகிறேன். ஒரு கொந்தளிப்பான நிலை மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் மாநிலத்தின் நிர்வாகியான கவர்னர் தனது கடமையை செய்ய முன்வரவில்லை. பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரக்கூடிய வி‌ஷயமாக தென்படுகிறது.

    மிக முக்கிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மாநில தலைமை நிர்வாகியான கவர்னர் தனது அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்துவிட்டு வெளியேறி இருக்கிறார்.

    இப்படி மோசமான நிலை புதுவையில் நிலவிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இன்னும் மோசமான நிலையை எட்டுவதற்கு முன்பாக அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இதற்காக நான் சில வேண்டுகோள்களை விடுக்கிறேன். புதுவை மாநிலத்திற்கு பொறுப்பாக இருக்கும் மத்திய உள்துறை உடனடியாக இதில் கவனம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். இதற்காக திறமை வாய்ந்த இடைக்கால கவர்னர் ஒருவரை புதுவைக்கு நியமிக்க வேண்டும்.

    அவர் புதுவை மாநிலத்தின் இன்றைய பிரச்சனையை திறமையாக கையாண்டு தீர்க்க கூடிய வகையில் செயல்படுபவராக இருக்க வேண்டும். புதுவை மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு வைத்திலிங்கம் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  #Kiranbedi #PuducherryPolitical
    சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அசோக் ஆனந்து எம்.எல்.ஏ.வின் பதவி பறிபோனது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Puducherry #AshokAnand #MLA #Vaithilingam
    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்து தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவரது தந்தையான ஆனந்தன் கடந்த 2006-07ம் ஆண்டு காலகட்டத்தில் புதுவை மாநில பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளராக இருந்தார்.

    அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றன. அதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி. அவர்களது மகன் அசோக் ஆனந்து ஆகிய 3 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 2008-ம் ஆண்டு முதல் புதுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த விஜயலட்சுமி இறந்துவிட்டதால் அவரது பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆனந்தன் மற்றும் அசோக் ஆனந்து ஆகியோர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

    இந்தநிலையில் அவர் மீதான சொத்து குவிப்பு புகார் குறித்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் 30-ந்தேதி தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் ஆனந்தன் மற்றும் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. ஆகியோரை குற்றவாளி என்று அறிவித்து இருவருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும், ரூ.1 கோடியே 74 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

    தண்டனை வழங்கப்பட்ட அசோக் ஆனந்து தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டத்துறையிடம் ஆலோசனை பெற்றார்.

    ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அசோக் ஆனந்தின் எம்.எல்.ஏ. பதவி கடந்த 30-ந்தேதி முதல் தானாகவே பறிபோனது. இந்த சட்டத்தின்கீழ் புதுவையில் முதன்முதலில் பதவியை பறிகொடுத்த எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து அசோக் ஆனந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் பிறப்பித்துள்ளார்.

    சட்டசபை காலியானதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். அதன்பின் தேர்தல் ஆணையம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கும். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அசோக் ஆனந்து 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். #NominatedMLAs #Vaithilingam
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் உழவர்கரை நகராட்சி சார்பில் இன்று தூய்மை பணி நடந்தது. மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கவும், சேதத்தை தடுக்கவும் வாய்க்கால்களில் அடைப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதை சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியாவது:-

    சட்டப்பேரவைக்கு மத்திய அரசு நியமித்த பா.ஜனதாநியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.

    எனவே, அவர்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தை அனுகி சபை நிகழ்வுகளில் பங்கேற்க கால நீட்டிப்பு பெறலாம். சட்டமன்ற உறுப்பினர்களின் சலுகைகளுக்கும் அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை சட்டசபைக்கு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏக்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    இதையடுத்து ஆகஸ்டு 1-ந்தேதி சட்டசபை நிகழ்வுகளில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு செப்டம்பர் 11-ந்தேதி வரையிலான காலத்திற்கு மட்டும் எம்.எல்.ஏ அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் சபாநாயகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். #PuducherryAssembly #NominatedMLAs #Vaithilingam
    நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் மறுவிசாரணைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் கேள்விக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதிலளித்தார். #PuducherryAssembly #Vaithilingam
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நிதி ஒதுக்க மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஒரு உரிமை பிரச்சினையை எழுப்பி பேசினார்.

    அவர் பேசும்போது, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்துள்ளது. இவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்கக்கூடாது என நான் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு என்ன பதில் அளிக்கிறீர்கள்? என்று கேட்டார்.

    இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் பதிலளித்து பேசியதாவது, சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்பிற்கு இணங்க 3 பேரும் இந்த சட்டமன்ற கூட்ட நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது உச்ச நீதிமன்றத்தில் 11.9.2018-ல் மறுவிசாரணை வரும் வரை பொருந்தும். அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். #PuducherryAssembly #Speaker #Vaithilingam
    ×