என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக எம்.எல்.ஏ.க்கள்"

    • பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • பாட்டிலில் தண்ணீரை பிடித்து குடிக்கும் வகையில் ரீல்ஸ் பதிவு செய்தார்.

    வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர். யமுனை ஆற்றின் நீர் கடுமையாக மாசடைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் யமுனை ஆற்றை தூய்மைபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அந்த சமயத்தில் யமுனை ஆற்றின் தூய்மை குறித்து எடுத்துரைக்க ஆற்றுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ. பாட்டிலில் தண்ணீரை பிடித்து குடிக்கும் வகையில் தூய்மையானது என சொல்லியவாறு ரீல்ஸ் பதிவு செய்தார்.

    அப்போது, ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டிருந்த பாஜக எம்.எல்.ஏ. திடீரென நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் உடனடியாக அவரை ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • சித்தராமையா மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததாக பாஜக புகார்.
    • சட்டசபையில் இரவு பகலாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் ரூ4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோத வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்துள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி சம்பந்தப்பட்ட மூடா ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர். அதனை சபாநாயகர் மறுத்த நிலையில், சட்டசபையில் இரவு பகலாக தர்ணா போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தலையணைகள் மற்றும் போர்வைகளை எடுத்துச் சென்று இரவு உணவை சாப்பிட்டு விட்டு அவையிலே இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கியது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று மூடா ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

    ×