என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை"

    • மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு இதுவரை ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • அதிநவீன கேத்லேப் ஆய்வகம் மூலம் 115 ஸ்டன்ட், 15 ஆஞ்சியோகிராம் செய்ய முடியும்.

    சென்னை:

    சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இருதய கேத்லேப் ஆய்வகத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மருத்துவமனையில் இதுவரை 687 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 88,589 பேர் இதுவரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு இதுவரை ரூ.447 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று ரூ.6.74 கோடி செலவில் அதிநவீன கேத்லேப் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆஞ்சியோகிராம், ஸ்டன்ட், பிறவி குறைபாடு உள்ள இருதய ஓட்டைகள் அடைப்பது, பேஸ்மேக்கர் பொருத்துவது, இருதய வால்வுகள் சரிசெய்வது போன்ற சிகிச்சைகள் இந்த மருத்துவமனையிலேயே மேற்கொள்ள முடியும்.

    சென்னையில் பல்வேறு பெரிய அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் மட்டுமே இந்த கேத்லேப் வசதி உள்ளது. தற்போது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தென் சென்னை மற்றும் வட சென்னை மக்களும் பயனடைவார்கள்.

    முதலமைச்சர் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கேத்லேப் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். அதன்படி படிப்படியாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அதிநவீன கேத்லேப் ஆய்வகம் மூலம் 115 ஸ்டன்ட், 15 ஆஞ்சியோகிராம் செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவிலான அச்சத்தை மாரடைப்பு மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படுத்தி வருகிறது.

    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இருதய நோயினால் பாதிப்புக்கு உள்ளானவர்களை 100 சதவீதம் காத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் சங்குமணி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பார்த்தசாரதி, நோடல் அலுவலர் டாக்டர் ரமேஷ், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திட ஆணையிட்டுள்ளேன்.
    • பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

    அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.

    இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

    • மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
    • இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்து இருந்தார்.

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

    அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    • சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

    * அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோரை முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

    * குறிப்பிட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை தருமாறு சிபாரிசு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளில் சிசிடிவியுடன் கூடிய 2 கட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளின் வெளி நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து இடங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்.

    * பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவ சங்கத்தினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    • மருத்துவர் பாலாஜி ஜெகந்நாத்தின் உடல் நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

    சென்னை:

    கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விக்னேஷ் என்ற நபர் மருத்துவர் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜிக்கு அனைத்து சிகிச்சைகளை வழங்கவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் வாலிபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மருத்துவரை தாக்கிய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுவது உள்பட 5 பிரிவுகளின்கீழ் கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வாலிபர் விக்னேஷை போலீசார் அழைத்துச் சென்றனர்.

    • கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்றும் இதய பாதிப்பு அவருக்கு உள்ளதால் இதயவியல் சிறப்பு மருத்துவக் குழுவும் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி நான் நலமாக உள்ளேன் என்று கூறும் வீடியோவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கூறும் மருத்துவர் பாலாஜி நான் நலமாக இருக்கிறேன். காலை உணவு சாப்பிடுவதாகவும் கூறுகிறார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

    முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • முறையான சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
    • மருத்துவமனை நிர்வாகிகளுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் (31) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இதனால் அவரது உறவினர்கள் இளைஞருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

    இளைஞர் உயிரிழந்து விட்டதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    இதே மருத்துவமனையில் நேற்று முன்தினம் தான் மருத்துவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அதற்குள் மீண்டும் அதே மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • ஐசியுவிற்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்

    சென்னை:

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை முழுவதிலும் விரைவில் மின் விநியோகம் சீராகும். அவசர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. நோயாளிகள் பயப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்

    இந்நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்

    ×