என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயராமன்"
- மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
- ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இதில், நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
மேலும், ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி செயராமனை கைது செய்யுங்கள் என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்கவும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
- அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது.
- செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறை செல்வார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி வருகிற 6 அமாவாசையோடு காணாமல் போய்விடும். தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரியை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளனர். அதே போல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது. அதனை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது.
செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறை செல்வார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது. எனவே மக்கள் விரோத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் வேலை இழந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். யாரெல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்களோ அந்தக் கட்சிகளுடன் மட்டும் தான் நாம் கூட்டணி.
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பின் இந்தியாவே உற்று நோக்கும் மாபெரும் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி திகழ்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
- தேர்தல் வரும் போது தி.மு.க.வின் சாயம் வெளுத்து விடும்.
திருப்பூர்:
மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றனர் . அவர்களை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர். அமலாக்கத்துறை மீதான பயத்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது சந்தர்ப்பவாத அரசியல்.
அ.தி.மு.க., தொடங்கியது முதல் தற்போது வரை இஸ்லாமியர்களுடன் நல்ல உறவு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவுடன் சிறுபான்மை இன மக்களை ஒரு சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். தேர்தல் வரும் போது தி.மு.க.வின் சாயம் வெளுத்து விடும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சிறப்பான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு- பணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






