என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர்- ஜெயராமன் பேட்டி
- தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
- தேர்தல் வரும் போது தி.மு.க.வின் சாயம் வெளுத்து விடும்.
திருப்பூர்:
மதுரையில் இன்று மாலை நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றனர் . அவர்களை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்றனர். அமலாக்கத்துறை மீதான பயத்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது சந்தர்ப்பவாத அரசியல்.
அ.தி.மு.க., தொடங்கியது முதல் தற்போது வரை இஸ்லாமியர்களுடன் நல்ல உறவு உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவுடன் சிறுபான்மை இன மக்களை ஒரு சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். தேர்தல் வரும் போது தி.மு.க.வின் சாயம் வெளுத்து விடும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சிறப்பான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு- பணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






