என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள ஆளுநர்"

    • 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல.
    • பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

    மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர்.

    மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தனர். அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல் முறையாக, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நாட்டின் ஜனாதிபதிக்கு 3 மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அவர் கூறியதாவது, "மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை.

    உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு?.

    அரசமைப்பில் திருத்தங்கள் செய்ய, நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், ஆனால் 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்" என விமர்சித்துள்ளார்.

     கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததற்கு குறித்து சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் பொருந்தும். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி கூட தாமதப்படுத்துவது இல்லை. அப்படியானால், ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் ஆளுநர்களுக்கு எப்படி இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் இதுகுறித்து பேசுகையில், "பாராளுமன்றத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை ஆளுநர் அர்லேகர் மகிமைப்படுத்துகிறார், ஆனால் சட்டமன்றத்தின் அதிகாரத்தை மதிக்கவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு சங் பரிவாரங்களுக்கு எதிரான "சில்வர் லைன்" என்று தெரிவித்தார்.

    • பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை.
    • பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.

    மும்பை:

    மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய கல்வி சங்கம் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது

    சங்கராச்சாரியார், ரிஷிகள் போன்ற துறவிகளின் போதனைகளால் இந்தியா தற்போதும் உயிர்ப்புடன் நிலைத்து நிற்கிறது. இந்திய நாகரிகம் பழமையானது மட்டுமல்ல, சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது, அது தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனிடையே, பல்கலைக்கழக நியமன விவகாரத்தில் கேரள அரசின் தலையீடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆரிப் முகமதுகான் கூறியுள்ளதாவது: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றமே சமீபத்தில் தெரிவித்து உள்ளது.

    அப்படியிருக்க இந்த பிரச்சினையில் கேரள அரசு எப்படி தலையிட முடியும்? தங்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். பல்கலைக்கழகம் பொது பட்டியலில் உள்ளது. பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அப்படியிருக்கும் போது மாநில அரசு எப்படி ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியும்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றினார்.
    • மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து தூக்கி சென்றனர்.

    நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

    அவ்வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றினார். பின்னர் கேரள ஆளுநர் உரையாற்றும் போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து வேறு இடத்திற்கு தூக்கி சென்றனர். இதனையடுத்து ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார்.

    ×