என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பல் கைவரிசை"

    • கோவிலில் புகுந்து திருட்டு கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    பொன்னை :

    பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் ரேணுகாம்பாள் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த வருடம் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதன் உண்டியல் காணிக்கை வருகிற ஆடி மாதம் தீமிதி திருவிழாவின் போது எண்ணப்பட இருந்தது. இந்தநிலையில் கோவில் பூசாரி கீரைசாத்து கிராமத்தை சேர்ந்த இருசன் (வயது 75) என்பவர் நேற்று ஒரு மணி கோவிலை பூட்டிவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு அளவில் சென்றுள்ளார். பின்னர் சுமார் 3 மணி அளவில் கோவில் நடை திறப்பதற்காக வந்துள்ளார்.

    அப்போது கோவில் உண்டியலை காணவில்லை. இது குறித்து அவர் உடனடியாக கிராம பொதுமக்களுக்கு தக வல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் பொதுமக்கள் சென்று பார்த்து, பின்னர் பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப் போது கோவில் உண்டியல் கோவிலின் பின்பக்கம் உள்ள ஏரியில் வீசப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர்.

    மர்மநபர்கள் உண்டியலைஉடைத்து பணத்தை திருடிக்கொண்டு, உண்டியலை ஏரியில் வீசிச்சென்றது தெரிய வந்தது. கோவில் உண்டியலில் பணம், தங்க நகைகளும் இருந்ததாக பூசாரி இருசன் புகார் அளித்தார். அதன்பேரில்பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • 6 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    கர்நாடகா மாநிலம் கே.ஜி. எப்.சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் யாரப்பாபா (வயது 28), முஜாகிர் (28), ஜீனைத் (29), சுகேவ் (30), ஷாப் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதிக்கு காரில் வந்தனர்.

    அப்போது நாட்டறம்பள் ளியை அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27) நேற்று காலை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காரில் வந்தவர்களில் 2 பேர் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த சீனிவாசனின் பைக்கை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

    இதைக் கண்ட சீனிவாசன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற இருவரும் அதி வேகமாக சென்றதால் நாட்ட றம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் அருகே கீழே விழுந்தனர்.

    அக்கம்பக்கத்தி னர் ஓடி வந்து இருவரையும் பிடித்தனர். அதேபோல் காரில் தப்ப முயன்ற 4 பேரும் பிடிபட்டனர். பிடி பட்ட 6 பேரையும் அருகி லுள்ள நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் காரை பரிசோ தனை செய்ததில் கத்தி, மடிக்கணினி, டேப், புளுடூத், துப்பாக்கிவடிவிலான லைட் டர் மற்றும் 8 போன்கள் உள் ளிட்டவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பிடிபட்டவர்க ளையும், பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களையும் அங்கு ஒப்படைத்தனர். இது தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் நாகராஜன் வழக்குப் டார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத் தூர் மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் இவர்கள் எதற்காக காரில் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்தனர் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    அறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி 4 பேர் கொண்ட கும்பல் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை அருகே தோப்புவயல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் ஆ.குடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 35) சூபர்வைசராகவும், அவரது சகோதரர் செந்தில்குமார் மற்றும் நவக்குடியை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு விற்பனை பணம் ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 300-ஐ எடுத்துக்கொண்டு ஊழியர்கள் புறப்பட்டனர். இதில் கண்ணன், செந்தில்குமார் ஒரு மோட்டார்சைக்கிளிலும், காளிதாஸ் மற்றொரு வாகனத்திலும் சென்றனர்.

    அப்போது அந்த கடை அருகே 4 பேர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் அளவுக்கு அதிகமான போதையில் இருப்பது போன்று தள்ளாடியபடி வந்தார். திடீரென கீழே தவறி விழுந்தார். அவரை தூக்குவதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே சென்றனர்.

    அப்போது போதை ஆசாமியுடன் வந்த 3 பேரும் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர். அவர்களை தடுத்த போது கண்ணனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். இதிலிருந்து தப்பிய கண்ணன் கடைக்குள் செல்ல தலைதெறிக்க ஓடினார். அப்போது கும்பலை சேர்ந்த ஒருவன் கண்ணனின் காலில் அரிவாளால் வெட்டினான். இதில் தவறி விழுந்த அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    இதில் அந்த பையில் இருந்த சில பணக்கட்டுகள் கீழே விழுந்தன. மீதமிருந்த ரூ.16 லட்சம்து 60 ஆயிரத்து 150 பணத்துடன் 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. கொள்ளையர்கள் தவற விட்டதில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 150 பணம் தப்பியது. படுகாயம் அடைந்த கண்ணனை மற்ற ஊழியர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த துணிகர கொள்ளை குறித்து மணல்மேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாழப்பாடி அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் கவரிங் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சின்ன பழனியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சாந்தி (வயது 26). நேற்று மாலை இவர் மங்களபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்தனர்.

    சாந்தி அணிந்திருந்தது கவரிங் நகை எனக் கூறப்படுகிறது. தங்கத்தை விட கவரிங் நகை உறுதியாக இருந்ததால், மர்ம நபர்கள் பலமாக இழுத்ததில் சாந்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கழுத்தில் காயமடைந்த சாந்தியை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண் சாந்தியிடம் பறித்த சங்கிலி கவரிங் என தெரிந்ததால், அந்த சங்கிலியை அப்பகுதியிலேயே மர்ம கும்பல் போட்டு விட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. வாழப்பாடி பகுதியில் மீண்டும் நகை பறிப்பு கும்பல் ஊடுருவியுள்ளது, அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முதலியார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம கும்பல் பறித்து சென்று விட்டது.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை வாரியார் நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மனைவி சித்ரா (வயது 42). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். மற்றொரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். சித்ரா கணவரை விட்டு பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    நேற்று சித்ரா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் சித்ராவின் வீட்டுக்கு வந்தது. அவர்கள் சித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படியும், அப்படி கழற்றி கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியது.

    இதனால் பயந்து போன சித்ரா அணிந்திருந்த தாலி செயின் உள்பட 8 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதே வேளையில் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை அந்த கும்பலிடம் இருந்து தப்பியது.

    இதுகுறித்து சித்ரா முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×