search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.ஜி.எப்.பில் இருந்து வந்து வாணியம்பாடியில் கைவரிசை காட்டிய கும்பல்
    X

    கே.ஜி.எப்.பில் இருந்து வந்து வாணியம்பாடியில் கைவரிசை காட்டிய கும்பல்

    • 6 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    கர்நாடகா மாநிலம் கே.ஜி. எப்.சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் யாரப்பாபா (வயது 28), முஜாகிர் (28), ஜீனைத் (29), சுகேவ் (30), ஷாப் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதிக்கு காரில் வந்தனர்.

    அப்போது நாட்டறம்பள் ளியை அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27) நேற்று காலை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காரில் வந்தவர்களில் 2 பேர் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த சீனிவாசனின் பைக்கை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

    இதைக் கண்ட சீனிவாசன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற இருவரும் அதி வேகமாக சென்றதால் நாட்ட றம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் அருகே கீழே விழுந்தனர்.

    அக்கம்பக்கத்தி னர் ஓடி வந்து இருவரையும் பிடித்தனர். அதேபோல் காரில் தப்ப முயன்ற 4 பேரும் பிடிபட்டனர். பிடி பட்ட 6 பேரையும் அருகி லுள்ள நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் காரை பரிசோ தனை செய்ததில் கத்தி, மடிக்கணினி, டேப், புளுடூத், துப்பாக்கிவடிவிலான லைட் டர் மற்றும் 8 போன்கள் உள் ளிட்டவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பிடிபட்டவர்க ளையும், பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களையும் அங்கு ஒப்படைத்தனர். இது தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் நாகராஜன் வழக்குப் டார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத் தூர் மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் இவர்கள் எதற்காக காரில் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்தனர் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×