என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராயப்பேட்டை"

    • புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வி.பி.ராமன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகள் சந்திப்பு பகுதியில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக வி.பி.ராமன் சாலை பகுதியில் மழைநீர் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து கடலுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த ஆய்வில் பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    • 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது.
    • உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் ராயப்பேட்டையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டம், வழித்தடம் 4-ல் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    இதற்காக 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவரிடம் அதிகாரிகள் மெட்ரோ ரெயில் பணிகள் குறித்து விளக்கி கூறினார்கள். இதன் பிறகு ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ ரெயில் பாதை, பூந்தமல்லி புறவழி மெட்ரோ ரெயில் நிலையம் பூந்தமல்லி மெட்ரோ பணிமனை ஆகியவற்றில் நடைபெற்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன் மோகன் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Chennai #Encounder
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தகவல் வந்தது.

    இதனையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ராஜவேலு  அவர்களை எச்சரித்தார். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் திடீரென ராஜவேலுவை தாக்கியது. அவரை பார்த்து தனியாகத்தான் வந்துள்ளான். போட்டு தள்ளுங்கடா என்று கூறிய படியே போலீஸ்காரர் ராஜவேலுவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. அவர்களிடம் இருந்து ராஜவேலு  தப்பிக்க முயன்றார். ஆனால் விடாமல் அக்கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஆனந்தன் போலீஸ்காரர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இடது காது, கன்னம் ஆகிய இடங்களிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக ரவுடி ஆனந்தனும் கூட்டாளிகளும் தப்பி சென்று விட்டனர்.

    இதனை தொடர்ந்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் ராஜவேலு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக ரவுடி ஆனந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் இருந்து ரவுடி ஆனந்தன் தப்பிச்சென்றதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது சடலம் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ×