search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva Saena"

    • ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
    • விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

    திருப்பூர் :

    பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

    • மத்திய அரசு, சமூக விரோத அமைப்புகளின்கூடாரங்களை சோதனை செய்து வருகிறது.
    • முக்கிய ஆவணங்களும், ஒயர்லஸ்., ஜி.பி.எஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருகன் தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்தியாவிலும், தமிழகத்திலும், பல்வேறு மாவட்டங்களில்2, 3 நாட்களாக மத்திய அரசு, சமூக விரோத அமைப்புகளின்கூடாரங்களை சோதனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில்கடந்த 2 தினங்களுக்கு முன்பாக, சென்னை, ராமநாதபுரம் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களில், ஒரு அமைப்பு தொடர்புடைய அலுவலகங்களில் முக்கிய ஆவணங்களும், ஒயர்லஸ்ஜி.பி.எஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே சமூக விரோத அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய உத்தரவுபிறப்பிக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் சார்பாக இன்றுஉச்சிநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும்மற்றும் ஜனாதிபதிக்கும் மறுபடியும் ஒரு புகார் மனுவை அனுப்பிஉள்ளோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
    • இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் தொடர்ந்து இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறைந்தது 3மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாயகரை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே நிறைய உதவிகளை செய்து வருகிறது.
    • ரம்ஜான் பண்டிகைக்கு அரிசி, மெக்கா, ஜெருசலேம் செல்ல மானிய உதவி வழங்குகிறது.

    சேலம் :

    சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா இளைஞர் அணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே நிறைய உதவிகளை செய்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அரிசி ,மெக்கா பயணம் செல்ல மானிய உதவி ,அதேபோல ஜெருசலேம் செல்ல மானிய உதவி வழங்குகிறது. இந்த உதவிகளை ஆண்டுக்காண்டு அதிகரிக்க செய்கிறது. அதேபோல பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்ல பயண கட்டண சலுகை வழங்கிட வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனைத்து கோவில்களுக்கும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×