சமூக விரோத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்

மத்திய அரசு, சமூக விரோத அமைப்புகளின்கூடாரங்களை சோதனை செய்து வருகிறது. முக்கிய ஆவணங்களும், ஒயர்லஸ்., ஜி.பி.எஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருகன் தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்தியாவிலும், தமிழகத்திலும், பல்வேறு மாவட்டங்களில்2, 3 நாட்களாக மத்திய அரசு, சமூக விரோத அமைப்புகளின்கூடாரங்களை சோதனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில்கடந்த 2 தினங்களுக்கு முன்பாக, சென்னை, ராமநாதபுரம் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களில், ஒரு அமைப்பு தொடர்புடைய அலுவலகங்களில் முக்கிய ஆவணங்களும், ஒயர்லஸ்ஜி.பி.எஸ் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே சமூக விரோத அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய உத்தரவுபிறப்பிக்க வேண்டுமென சிவசேனா கட்சியின் சார்பாக இன்றுஉச்சிநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும்மற்றும் ஜனாதிபதிக்கும் மறுபடியும் ஒரு புகார் மனுவை அனுப்பிஉள்ளோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com