என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sergei Lavrov"

    • இந்திய தலைவர்கள் யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை
    • இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியை ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாரும் இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஷ்ய எண்ணெய்யை இனி வாங்கப்போவதில்லை என்ற இந்தியாவின் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். பிரதமர் மோடி மற்றும் பிற இந்தியத் தலைவர்கள் உட்பட வேறு யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை" என்று கூறினார்.

    கடந்த வாரம் இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அறிவித்த ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியையும் ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

    ஆனால் தற்போதுவரை இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • ரஷ்யாவை பலவீனப்படுத்த, உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன.
    • போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அமெரிக்காவின் கையில் உள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 10 மாதமாக நீடித்து வரும் நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ரஷியாவிற்கு எந்தவொரு ராணுவ ரீதியான அச்சுறுத்தலையும் உக்ரைன் நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த பிரச்சினைக்கு ரஷியா தீர்வு காணும். ரஷியாவை பலவீனப்படுத்த உக்ரைனில் நடக்கும் போருக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் விடுத்த டுவிட்டர் பதிவில், ரஷியா யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும், ஈரானுடனான ரகசிய ஒப்பந்தங்களோ, ரஷிய மந்திரி லாவ்ரோவின் அச்சுறுத்தல்களோ போரை நிறுத்த உதவாது, உக்ரைன் இறுதிவரை போராடி அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் ரஷியாவை வெளியேற்றும். இறுதி வரை அமைதியாக காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷியாவிற்கு வர வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவ் இன்று அழைப்பு விடுத்துள்ளார். #KimJongUn #SergeiLavrov
    மாஸ்கோ :

    ரஷிய வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவ் இன்று வட கொரிய தலைநகர் பியாங்யோங் சென்றடைந்தார். அங்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னை அவர் சந்தித்து பேசினார். அப்போது கிம் ஜாங்-யை ரஷியா வருமாறு செர்கி லாவ்ரோவ் அழைப்பு விடுத்தார். 

    பியாங்யோங் நகரில் கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசிய செர்கி லாவ்ரோவ், ‘நீங்கள் ரஷியா வாருங்கள். உங்களை பார்த்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். கொரிய தீபகற்பத்தில் நீங்கள் முன்னெடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் வெற்றி பெற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.’ என ரஷியா வர கிம் ஜாங்க்கு செர்கி லாவ்ரோவ் அழைப்பு விடுத்துள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கி லாவ்ரோவை வட கொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #SergeiLavrov

    ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார். #Russia #Iran #NuclearDeal
    மாஸ்கோ:

    வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பிற நாடுகள், ஒப்பந்தத்தை தொடரப்போவதாக கூறின.

    இந்த நிலையில் ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார்.

    இதற்கிடையே ஈரானுடன் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டில் சிறைவைக்கப்பட்டு உள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அமெரிக்க கைதிகள் விவகாரத்தில் ஈரானுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதா என வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. #Russia #Iran #NuclearDeal
    ×