search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scorching sun"

    • குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும்.
    • தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதைவிட அதிகம்.

    பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு "வாட்டர் பெல்" என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அமலானது.

    இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும். குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும். 

    அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த வாட்டர் பெல் முறையின் மூலம், வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் காத்துக் கொள்ள முடியும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் கூட இன்னும் ஆரம்பிக்காத நிலையில், வெயில் இப்போதே ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

    இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தினமும் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும்.

    அதனால், கேரளாவின் "வாட்டர் பெல்" நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • இதேபோல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழகத்திலேயே ஈரோட்டுக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக 105.44 டிகிரி வெயல் பதிவாகி உள்ளது.

    சேலம்:

    கோடை வெயில் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலத்தில் கடந்த 14-ந் தேதி அதிகபட்சமாக 105.4 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் 2-வது முறையாக வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 105.08 டிகிரி பதிவாகி யுள்ளது. வரும் காலங்க ளில் வெப்பநிலை அதிக ரிக்கும் என்பதால் வெயி லின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் தாக்கம் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரு கிறார்கள். பகல் நேரங்களில் பயணத்தை தவிர்த்து மாலை நேரங்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இதேபோல இளநீர், சர்பத் கடைகள், கம்மங்கூழ், கரும்புச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது வெயில் சீசன் தொடங்கி விட்ட நிலையில் நுங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. அதேபோல மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    கடும் வெயில் காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வெயில் தாக்கம் உள்ளது. பகலில் கடுமையான வெப்பம் காரணமா கவும் இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாகவும் தூங்க முடியாமல் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதேபோல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழகத்திலேயே ஈரோட்டுக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக 105.44 டிகிரி வெயல் பதிவாகி உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்திலும் காலை முதலே வெயில் சுட்டெரிக்கிறது.

    வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிக்க பொது மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படு கின்றன. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    ×