search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand dunes"

    • மீன்வர்கள் வெள்ளையாற்றின் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
    • வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்து செருதூர் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் சுமார் 1100 மீனவ குடும்பங்கள், வசித்து வருகின்றனர்.

    மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மீன்வர்கள் வெள்ளையாற்றின் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

    படகுகள் செல்ல முடியாதபடி மணல் திட்டுகள் தேங்கி உள்ளதோடு படகு ஒன்றுடன் ஒன்று மோதியும் படகின் அடிப்பகுதி மணலில், தரைத்தட்டி விபத்து ஏற்படுகிறது பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகு சேதம் அடைவதுடன் சில சமயங்களில் மீனவர்கள் உயிரிழக்க நேரிடுவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே செருதூர் கிராம வெள்ளையாற்றின் குறுக்கே தேங்கி நிற்கும் மணல் திட்டுகளை நேரில் ஆய்வு செய்து வெள்ளையாற்றின் குறுக்கே தேங்கி நிற்கும் மணல் திட்டுகளை அகற்றியும் தூண்டில் வளைவு அமைத்து செருதூர் மற்றும் வேளாங்கண்ணி மீனவகிராம மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.
    • இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.

    இந்த நெடுஞ்சாலையில் நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகிறது.

    மண் குவியல்

    இந்த நெடுஞ்சாலையில் உள்ள சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும், இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.

    தற்போது இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    மண் குவியல்கள் சாலையை ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் அவ்வப்போது மண் குவியல் மீது மோதி சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மணல் திட்டில் ஏறி மீன் பிடிக்க சென்ற நிலையில் எதிர்பாராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.
    • உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதகுசாலை கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த மாதம் 18-ம் தேதி இரவு, கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டில் ஏறி, மீன் பிடிக்க சென்ற நிலையில்,எதிர்பா ராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.

    இதில் கொளஞ்சிநாதன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற ஆகாஷ், மனோஜ் ,ராஜேஷ் ஆகிய 3 பேரும் பலியாகினர். இந்நிலையில், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா .அருள்மொழி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம. க. ஸ்டாலின் மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க நிர்வாகிகளுடன் இணைந்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது அவர்கள் கூறும்போது:- உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தகுதியான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். 15-ம் தேதிக்குள் இது குறித்து அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால், வன்னியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

    • மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரை கிராமத்தில் மீனவ மக்கள் அதி கமாக வசித்து வருகின்றனர். இங்கு உள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். சுமார் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள் நாட்டுபடகுகள், கட்டுமரம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    கடற்கரையில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுகளால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி தான்மீன்பிடிக்க செல்கின்றனர். படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் திண்டாடுகின்றனர். மேலும் கடலில் பிடித்த மீன்களை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தலையில் சுமந்து கொண்டு வருவது மிக மிக வேதனையாக உள்ளது.

    மணல்திட்டால் படகுகளை தள்ளமுடியாமல் மீனவர்கள் கடும் அவதி படுகின்றனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு தூண்டில் வளைவு மட்டுமே. எனவே உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் விரும்புகின்றனர்.

    ×