search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery of money"

    • காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.
    • வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் குடியிருந்து வருபவர் காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியே தயாராக புல்லட் மோட்டார் பைக்குடன் ஒருவர் இருந்துள்ளார். அந்த புல்லட் மோட்டார் பைக்கில் ஏறினார்கள் . பின்னர் மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்த போது மோட்டார் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேர் புல்லட் மோட்டார் பைக்கை சிறிது தூரம் தள்ளிக்கொண்டு சென்றனர். அவருக்கு பின்னால் சென்ற காளியண்ணன் வேகமாக நடக்க முடியவில்லை . அதனால் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஓடி வருவதை பார்த்த மூன்று வாலிபர்களும் புல்லட் மோட்டார் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காளியண்ணனும் அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த டேபிள் டிராயரில் வைத்திருந்த பணம் ரூ.50 ஆயிரமும், 5 பவுன் தங்க நகையும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து காளியண்ணனின் மகன் மணி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட் மோட்டார் பைக்கை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் திருடர்கள் விட்டு சென்ற மோட்டார் பைக் திருடி வந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தப்பியோடிய மூன்று திருடர்களையும் தொடர்ந்து தேடி வந்தனர். அப்போது தப்பியோடிய மூன்று நபரில் ஒருவரான ராஜ்குமார் என்பவர் கோதூரிலிருந்து செருக்கலை செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழி பண்ணைக்குள் புகுந்து மறைந்து இருப்பது தெரியவந்தது. அவனை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் தொடர்ந்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் திருடர்களை தேடிய நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் தொட்டியம் தோட்டம் பகுதியில் விக்னேஷ் என்பவன் மறைந்து இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் ராஜ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய மற்றொரு திருடனை நல்லூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர்.
    • இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலப்பாளையம் வி.ஐ.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணி (59). இவர் ரிக் வண்டி தொழில் செய்து வருகிறார்.

    100 நாள் வேலை

    இவரது தந்தை காளி யண்ணன், தாயார் நல்லம்மாள் ஆகியோர் பரமத்திவேலூர் அருகே கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் வசித்து வருகின்றனர். காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மணியின் தாயார் நல்லம்மாள் அருகிலுள்ள தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.

    2 மர்மநபர்கள்

    காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    புல்லட்

    இதை பார்த் இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்தனர். அங்கு மற்றொருவர் பதி வெண் இல்லாத புல்லட்டுடன் தயாராக இருந்தார்.

    இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.

    இவர்களுக்கு பின்னால் காளியண்ணனும் துரத்திச் சென்றார். இதனிடையே மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் காளியண்ணனால் வேகமாக ஓட முடியவில்லை. இத னால் சிறிது தூரம் ஓடிய காளியண்ணன், திருடன் திருடன் என்று சத்தம் போட்டு உள்ளார்.

    தப்பியோட்டம்

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த 3 வாலிபர்களும் புல்லட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். மர்மநபர்களை பொதுமக்களும் துரத்தி சென்றனர். ஆனால் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.

    5 பவுன் நகை

    இதை தொடர்ந்து காளியண்ணனும், அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் டேபிள் டிராயரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து காளியண்ணன் அவரது மகன் மணிக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணி இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட்டை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார்.
    • பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கமலநாதன்.

    இவரது மகன் நரேஷ்கமல் (வயது 16) .இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

    இவர் வீட்டில் இருந்தபோது வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை பார்த்து நீ யார் என கேட்டுக் கொண்டிருந்த போதே மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார். பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்த வடமாநில மர்ம நபர் குறித்து தீவிர விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள இளைய மகன் வீட்டிற்கு தூங்க சென்றார்.
    • பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    கோவை :

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கூத்தாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி ராஜியா பேகம் (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள இளைய மகன் வீட்டிற்கு தூங்க சென்றார். அப்போது ராஜியா பேகம் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மறுநாள் வீட்டிற்கு திரும்பிய அவர் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    • வேடசந்தூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது
    • காலை கடையை திறக்க வந்த வியாபாரிகள் பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நால்ரோடு பகுதியில் கடைகள் உள்ளன. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகளை பூட்டிச் சென்றனர்.

    இரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். வேல் என்பவரின் டீக்கடை பூட்டை உடைத்து ரூ.13,000 பணம் மற்றும் சிகரெட், பீடி பண்டல்களை எடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அஸ்கர் என்பவரின் மருந்து கடையில் புகுந்து ரூ.12,000 பணம் மற்றும் ஹார்லிக்ஸ் பாட்டில்களை எடுத்து சென்றனர். மேலும் அடுத்ததாக இருந்த முத்து கிருஷ்ணன் என்பவரது பேக்கரியில் ரூ.8000 பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர்.

    கடைகளில் கண்காணிப்பு கேமரா இருப்பதை கவனித்த கொள்ளையர்கள் பதிவாகி இருந்த ஹார்டு டிஸ்குகளையும் கழற்றி எடுத்து சென்று விட்டனர். இன்று காலை கடையை திறக்க வந்த வியாபாரிகள் பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கடையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வேறு கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் முகம் பதிவாகியுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×