search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுக்குள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பேர் கைது
    X

    வீட்டுக்குள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பேர் கைது

    • காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.
    • வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் குடியிருந்து வருபவர் காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியே தயாராக புல்லட் மோட்டார் பைக்குடன் ஒருவர் இருந்துள்ளார். அந்த புல்லட் மோட்டார் பைக்கில் ஏறினார்கள் . பின்னர் மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்த போது மோட்டார் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேர் புல்லட் மோட்டார் பைக்கை சிறிது தூரம் தள்ளிக்கொண்டு சென்றனர். அவருக்கு பின்னால் சென்ற காளியண்ணன் வேகமாக நடக்க முடியவில்லை . அதனால் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஓடி வருவதை பார்த்த மூன்று வாலிபர்களும் புல்லட் மோட்டார் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காளியண்ணனும் அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த டேபிள் டிராயரில் வைத்திருந்த பணம் ரூ.50 ஆயிரமும், 5 பவுன் தங்க நகையும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து காளியண்ணனின் மகன் மணி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட் மோட்டார் பைக்கை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் திருடர்கள் விட்டு சென்ற மோட்டார் பைக் திருடி வந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தப்பியோடிய மூன்று திருடர்களையும் தொடர்ந்து தேடி வந்தனர். அப்போது தப்பியோடிய மூன்று நபரில் ஒருவரான ராஜ்குமார் என்பவர் கோதூரிலிருந்து செருக்கலை செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழி பண்ணைக்குள் புகுந்து மறைந்து இருப்பது தெரியவந்தது. அவனை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் தொடர்ந்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் திருடர்களை தேடிய நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் தொட்டியம் தோட்டம் பகுதியில் விக்னேஷ் என்பவன் மறைந்து இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் ராஜ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய மற்றொரு திருடனை நல்லூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×