என் மலர்

    நீங்கள் தேடியது "Queen Elizabeth II"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • இறுதி ஊர்வலத்தின்போது வழிநெடுக்க பொதுமக்கள், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.

    லண்டன்:

    பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை வரை ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு உள்ளூர் நேரப்படி பகல் 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.


    வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் ராணி எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இறுதி பயணம் தொடங்கியது. ராணி எலிசபெத் உடல் வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது சவப்பெட்டி மீது ராணிக்கான கிரீடம், செங்கோல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது. பிரார்த்தனைக்குப் பின்னர் அவரது உடல் விண்ட்சர் கோட்டையின் வழியாக செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக்க பொதுமக்கள், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர். கோட்டை மைதானத்தில் இருந்து துப்பாக்கிகள் முழங்க அரச மரியாதை அளிக்கப்பட்டது.

    ஜார்ஜ் தேவாலயத்துக்குள் சவப்பெட்டி கொண்டு வந்ததும், அங்கு கல்லறை ஜெபம் நடைபெற்றது. ஜெபத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான தனிப்பட்ட முறையில் நெருக்கமான விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த ஜெபத்தைத் தொடர்ந்து ராணியின் ஆட்சி நிறைவுறுவதைக் குறிக்கும் சம்பிரதாயங்கள் நடைபெற்றன. ஏகாதிபத்திய அரச மணிமுடி, ராணியின் சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை சவப்பெட்டியின் மேலே இருந்து அகற்றப்பட்டன. பிறகு ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டு அரச பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட உலக நாடுகளை சேர்ந்த 500 தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்
    • இறுதி சடங்கினை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 125 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து வைர விழா கொண்டாடி சாதனை படைத்த ராணி எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், மன்னர் சார்லசை சந்தித்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

    ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், மன்னர் சார்லசை சந்தித்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

    இங்கிலாந்தின் அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பாகிஸ்தான் உள்பட உலக நாடுகளை சேர்ந்த 500 தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மன்னர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என 2 ஆயிரம் பேர் லண்டனுக்கு வந்தனர்.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் லண்டன் வந்தடைந்தார். நேற்று அவர் இந்திய மக்கள் சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் இங்கிலாந்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    இன்று காலை வரை ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பகல் 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

    11 நாட்களுக்கு பிறகு வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் ராணி எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இறுதி பயணம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்து வந்தனர்.

    200 இசைக்கலைஞர்கள் இசை எழுப்பியபடி செல்ல ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் புகழ்பெற்ற வீதிகள் வழியாக பக்கிம்காம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை சென்றது.

    இந்த ஊர்வலத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரோட்டோரம் திரண்டு இருந்த பொதுமக்கள் தங்கள் மகாராணிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.


    ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது உடல மேல் கிரீடம் செங்கோல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் விண்ட்சர் கோட்டைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள சிறிய தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ராணியின் உடல், அவரது கணவர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது பெற்றோரும், சகோதரியும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதிச்சடங்கு நடைபெறும்போது ஒலித் தொந்தரவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஹிமித்ரோ விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    பிரமாண்டமாக நடந்த இந்த இறுதி சடங்கினை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 125 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் பூங்காக்கள், ரெயில் நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் பொதுஇடங்களில் பெரிய அளவிலான திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    1965-ம் ஆண்டு போர்க்கால பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச்சடங்கு பிரமாண்டமாக நடந்தது. 57 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இன்று ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு அதேபோன்று மிக பிரமாண்டமாக நடந்துள்ளது.

    மன்னர் காலத்தில் நடப்பது போன்று பாரம்பரிய முறைப்படி இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி டி.வி. சானல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

    இறுதி சடங்கையொட்டி பக்கிம்காம் அரண்மனை, பாராளுமன்ற கட்டிடம், வெஸ்ட் மின்ஸ்டர் அபேவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராணி எலிசபெத் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலைவர்கள் லண்டன் வருகை.
    • மன்னர் சார்லஸ் உடன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சந்திப்பு.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது நினைவாக பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் பங்கேற்றிருந்த மக்கள் ஒரு நிமிடம் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதையொட்டி ராணி உடல் வைக்கப்பட்டிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவது 60 வினாடிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியேரை தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அயர்லாந்து அதிபர் மைக்கேல் டேனியல் ஹிக்கின்ஸ் உள்ளிட்டோர் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். 


    முன்னதாக நேற்று ராணி எலிசபெத் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, லான்காஸ்டர் ஹவுஸில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை, திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளவரசர் ஆண்ட்ரூ தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தினார்.
    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.

    லண்டன்ல்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியா சார்பில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். 


    இந்நிலையில் ராணியின் உடலுக்கு அவரது 2வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ அஞ்சலி செலுத்தினார். ஒரு மகன் மீதான உங்கள் அன்பு, இரக்கம், அக்கறை, நம்பிக்கையை என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரிட்டன் ராணி எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை மறுநாள் தேசி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட இருக்கிறது.

    பிரட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்து சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரசு குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ராணி எலிசபெத் மறைவுக்கு பிரிட்டனில் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகள் மற்றும் அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறது. இரங்கல் செய்தியுடன் ராணி எலிசபெத் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறது.


    ஆப்பிள் வலைதளத்தில் உள்ள ராணி எலிசபெத் புகைப்படத்தை 1952 ஆம் ஆண்டு டோரோத்தி வைல்டிங் எடுத்தார் என கூறப்படுகிறது. ராணி எலிசபெத் மறைவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப வழக்கப்படி அரசி அல்லது மன்னர் உயிரிழந்தார் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும். அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர்.

    ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடைபெற இருக்கிறது. அங்கு ராணியின் உடல் மூன்று நாட்களுக்கு வைக்கப்பட இருக்கிறது. அந்த மூன்று நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலி செலுத்தலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராணி எலிசபெத் மறைவுக்கு பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் நாளை மறுநாள் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

    புதுடெல்லி:

    பிரிட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

    ராணி எலிசபெத் மறைவுக்கு முதல் கட்டமாக பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 நாட்கள் ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராணி எலிசபெத் மறைவை ஒட்டி இந்தியா முழுவதும் வரும் 11ம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான இளவரசி யூஜெனியின் காதல் திருமணம் வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. #Royalwedding #PrincessEugenie #QueenElizabethII
    லண்டன் :

    பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், அவரது இரண்டாம் மகனான இளவரசர் ஆண்ட்ரூ - சாரா தம்பதியரின் மகள் இளவரசி யூஜினி. பிரிட்டன் அரியாசனத்துக்கான முடிவரிசையில் யூஜினி 9-வது இடத்தில் உள்ளார்.

    அமெரிக்காவை சேர்ந்த ஜேக் ப்ரூக்பேங்கை காதலித்து வந்த யூஜினி அரச குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். பட்டயக்கணக்காளர் தம்பதியரின் மகனான ஜேக் ப்ரூக்பேங், தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு ஓட்டல் வெயிட்டராக பணியாற்றியவர். சுவிட்சர்லாந்தில் பனி சறுக்கு விளையாட்டில் பங்கேற்ற போது யூஜினி மற்றும் ஜேக் ப்ரூக்பேங் இருவரும் நண்பர்களாக அறிமுகம் ஆகினர். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாறியது.

    அவர்களது திருமணம் லண்டனில் உள்ள வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அரச குடும்பத்தினர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் பாடகர்கள் உள்பட சுமார் 850 பேர் கலந்து கொண்டனர்.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் வின்ட்சர் தேவாலயத்தை சுற்றி குதிரை வண்டியில் ஊர்வலமாக வந்தனர். அரச தம்பதியரை கண்ட மக்கள் ஆராவாரக் குரல் எழுப்பினர். பிரிட்டன் அரச குடும்பத்தின் திருமணம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மட்டுமே சுமார் ரூ.40 கோடி செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Royalwedding #PrincessEugenie #QueenElizabethII
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். #QueenElizabethII #PrinceHarry #MeghanMarkle

    லண்டன்:

    பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

    இந்த ஜோடியினர் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அரச குடும்பம் முறைப்படி இந்த திருமணத்துக்கு லண்டன் ராணி முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும்.



    இந்நிலையில், இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். அதற்காக ராணி எலிசபெத் கையொப்பமிட்ட ஒப்புதல் கடிதத்தை பக்கிங்காம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது. #QueenElizabethII #PrinceHarry #MeghanMarkle
    ×