search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public awareness"

    • புற்று நோய் கதிரியக்க சிகிச்சை கருவியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றால் புற்று நோயிலிருந்து எளிதாக குண மாகலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகிறேன்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.

    ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் திரவநிலை எரிவாயு நிறுவனத்தின் சார்பில் தீ விபத்து தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது, மருத்துவமனைக்கு அனுப்புவது, குறித்தும் இயற்கை எரிவாயு நிறுவன பாதுகாப்பு துறையினர், மாவட்ட தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, எரிவாயு நிறுவன மண்டல தலைவர் வெங்கடேசன், முதுநிலை பாதுகாப்பு பொறியாளர் தாமோதரன், அலுவலர்கள் பாலாஜி, இசக்கி ராஜாராம்,சுரேஷ்,ரவிதேஜா,தீயணைப்பு நிலை அலுவலர் பாலாஜி, மாந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் ரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
    • தீயை அணைப்பது குறித்து விளக்கம் அளித்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி உத்தரவின் பேரில் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குடியாத்தம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் பயணிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள், ஆட்டோ ஆகியோரிடம் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    தொடர்ந்து வீடு மற்றும் பணி செய்யும் இடங்கள், வாகனங்களில் தீப்பற்றினால் அதிலிருந்து பாதுகாப்பாக மீள்வது குறித்தும், தீயை அணைப்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தனர்.

    • துண்டு பிரசுரங்கள் வினியோகம்
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதா வரவேற்றார்.

    தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் வாசுதேவ ரெட்டி, மாநில அளவிலான பயிர் காப்பீடு திட்ட அலுவலர் உஷா, மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிர் காப்பீடு குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

    இதனை அடுத்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய குழு உறுப்பினர் பி. ராஜா உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது.
    • கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது. கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு பகலாக கஞ்சா மற்றும் புகையிலை விற்பவர்களை கண்டறிந்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது போன்ற நடவடிக்கையால் கோத்தகிரி பகுதியில் முன்பு இருந்ததை விட கஞ்சா மற்றும் புகையிலை பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்தும், எதிர்கால இளைஞர்களின் வாழக்கை எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை கோத்தகிரி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே உதவி காவல் ஆய்வாளர் சேகர் வழங்கினார். மேலும் கஞ்சாவை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை அவர்களை ஏற்க வைத்தார். இதே போன்று கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியிலும் போலீசாரால் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    • போதை பொருட்கள் பயன்படுத்துவோர், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நேற்று கீழ் கோத்தகிரி மற்றும் சோலூர்மட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு எது போன்ற தீங்கு ஏற்படுகிறது.

    போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும், எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வை காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் வழங்கினார். 

    • கழிவுநீா் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்வது.
    • மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க செய்வது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி பொன்விழா நகர் பகுதியில் தமிழக அரசின் "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் நீர் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.

    இதில் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம், துணைத்தலைவா் வீரக்குமாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சொா்ணாம்பாள், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கீதா சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம் கூறியதாவது: -கணக்கம்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுநீா் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்வது, அப்பகுதியில் தொடா்ந்து சுகாதாரத்தை உறுதி செய்வது, மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க செய்வது. மேலும், மக்கும் குப்பைகளை அவா்களது வீடுகளிலேயே சிறு குழி எடுத்து, அதில் மக்க செய்து உரமாக பயன்படுத்த செய்வது என அறிவுறுத்தப்படும் என்றாா்.

    இதையடுத்து பொன் விழா நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டு இயக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் திட்ட அலுவலர் ( மகளிர் திட்டம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம் ), ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.), வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.), ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர், மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

    • 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை:

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை யொட்டி திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வரையப்பட்ட மாபெரும் கோலத்தை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

    மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் 44 - வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ளது.

    இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து சர்வதேச செஸ் போட்டி குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வரையப்பட்ட மாபெரும் கோலத்தை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சையத் சுலைமான், திருவண்ணாமலை நகரமன்றத்தலைவர் நிர்மலா கார்த்திவேல்மா றன், மகளிர் சுயஉதவிக்குழு உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ×