search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் போதைப்பொருள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
    X

    கோத்தகிரியில் போதைப்பொருள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    • மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது.
    • கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது. கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு பகலாக கஞ்சா மற்றும் புகையிலை விற்பவர்களை கண்டறிந்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது போன்ற நடவடிக்கையால் கோத்தகிரி பகுதியில் முன்பு இருந்ததை விட கஞ்சா மற்றும் புகையிலை பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்தும், எதிர்கால இளைஞர்களின் வாழக்கை எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை கோத்தகிரி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே உதவி காவல் ஆய்வாளர் சேகர் வழங்கினார். மேலும் கஞ்சாவை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை அவர்களை ஏற்க வைத்தார். இதே போன்று கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியிலும் போலீசாரால் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×