search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pranab"

    ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தந்தை பிரணாப் முகர்ஜி இனி தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என ஷர்மிஸ்தா முகர்ஜி இன்று தெரிவித்துள்ளார். #SharmisthaMukherjee #PranabMukherjee #activepolitics
    புதுடெல்லி:

    சிவசேனாவுடன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளவும், அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பா.ஜ,க தலைவர் அமித்ஷா சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்தனர்.

    இதற்கிடையே, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் ரவுத், வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் முன்நிறுத்தும் என கருத்து தெரிவித்திருந்தார். 

    இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், சஞ்சய் ரவுத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக இன்று நேரடியாக பதில் அளித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற எனது தந்தை , இனி ஒருபோதும் தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என தெரிவித்துள்ளார். #SharmisthaMukherjee #PranabMukherjee #activepolitics
    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், பிரணாப் முகர்ஜியை பிரதமராக ஆர்.எஸ்.எஸ் முன்னிருத்தும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. #RSS #Pranab #ShivSena
    புதுடெல்லி:

    மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சிவசேனா இடம் பெற்றுள்ளது. ஆனாலும், சிவசேனா பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியையும் கடுமை யாக விமர்சனம் செய்து வந்தது.

    சிவசேனாவுடன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளவும், அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பா.ஜ,க தலைவர் அமித்ஷா சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்தனர்.

    இதற்கிடையே தங்களுக்கு 152 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா நிபந்தனை விதித்துள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்றும் நோக்கில் இந்த நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தேர்தலை தனித்து சந்திக்கவே சிவசேனா தயாரக உள்ளது. 

    இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று சிவசேனா தெரிவித்து உள்ளது. பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சிவசேனா இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் கூறி இருப்பதாவது-

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜக.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம். டெல்லியில் உள்ள அரசியல் சக்திகள் இந்த முடிவை எடுக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

    இதேபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பிரதமர் வேட்பாளருக்கு மாற்றாக பிரணாப்பை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபடலாம். ஆர்.எஸ்.எஸ். விழாவில் அவர் பேசியதை ஆர்.எஸ்.எஸ். பாராட்டி இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க ஏற்கனவே அறிவித்து விட்டது. இது குறித்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சிவசேனா தான் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

    முன்னாள் ஜனாதிபதியும் காங்கிரஸ் மூத்த தலை வருமான பிரணாப்முகர்ஜி சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நாக்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய சிறப்புரையை பா.ஜ.க. தலைவர் அத்வானி பாராட்டியுள்ளார். #pranab #rss #advani #congress
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் இதில் பங்கேற்க கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தி தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாக்பூர் வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    அதன்பின், உபச்சார விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசுகையில், தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்கமுடியாது என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் கருத்தை இன்று ஆமோதித்த பா.ஜ.க. மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அழைப்பை ஏற்று இவ்விழாவில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி, இதன் மூலம் இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் சித்தாந்த வேற்றுமைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நிரூபித்துள்ளதாகவும், பன்முக மதநம்பிக்கை கொண்ட நமது சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நனது நாட்டின் ஒருமைப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் நிலைநாட்டியுள்ளதாகவும் அத்வானி குறிப்பிட்டுள்ளார். #pranab #rss #advani #congress
    ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கான பிரிவு உபச்சார விழா அடுத்த மாதம் 7-ம் தேதி நடக்க உள்ளது. இதில், கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரனாப் முகர்ஜியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இதற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், “ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்துள்ளது, பிரணாப் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இனி, அதை விவாதிப்பது பொருட்டல்ல. அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களின் சித்தாந்தத்தில் உள்ள தவறுகளை எடுத்துச்சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
    ×