search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS event"

    ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்ற நிலையில், அது தொடர்பாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் பரவி வருவது தொடர்பாக பிரணாப்பின் மகள் கருத்து தெரிவித்துள்ளார். #PranabAtRSSEvent
    புதுடெல்லி:

    நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சம்மதித்தபோதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிரணாப் முகர்ஜியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜியும் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரின் கருப்பு தொப்பி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது போலவும், கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்து மரியாதை செலுத்தியது போலவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பிரணாப் புகழ்ந்து பேசியது போல வாட்ஸப்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.



    ஆனால், உண்மையில் பிரணாப் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம். சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் நாடு சீர்குலையும் என ஆர்.எஸ்.எஸ்.க்கு பாடம் எடுத்திருந்தார். இந்நிலையில், மார்பிங் புகைப்படங்கள் குறித்து பிரணாப்பின் மகள் அச்சம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நான் எதை நினைத்து பயந்தேனோ, எதற்காக எனது அப்பாவை எச்சரித்தேனோ அது நடந்தே விட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலமணி நேரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், பாஜக / ஆர்.எஸ்.எஸ் அதன் வேலையை முழு வீச்சாக செய்ய ஆரம்பித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.
    காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆட்சேபம் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜி உரையாற்ற உள்ளார். #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு  ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரணாப் முகர்ஜிக்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கடிதம் எழுதியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்படி ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

    ஆனால், எதிர்ப்பு கடிதங்களுக்கு பதில் அளிக்காத பிரணாப் முகர்ஜி, தான் பேசவேண்டியதை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேச உள்ளதாக கூறியிருக்கிறார்.  எனவே, இன்றைய விழாவில் பங்கேற்கும் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலையே நாக்பூர் வந்து சேர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை விழாவிற்கு செல்லும் அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி மற்றும் பிற தலைவர்களையும் பிரணாப் சந்திக்கலாம் என தெரிகிறது. #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
    ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கான பிரிவு உபச்சார விழா அடுத்த மாதம் 7-ம் தேதி நடக்க உள்ளது. இதில், கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரனாப் முகர்ஜியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இதற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், “ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்துள்ளது, பிரணாப் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இனி, அதை விவாதிப்பது பொருட்டல்ல. அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களின் சித்தாந்தத்தில் உள்ள தவறுகளை எடுத்துச்சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
    ×