என் மலர்
நீங்கள் தேடியது "பிரனாப் முகர்ஜி"
வாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவுகளை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு இயந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி இயந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.
மின்னணு இயந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

’வாக்காளர்களின் தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களை கவனித்து வருகிறேன். நமது ஜனநாயகத்தின் வேர்களுக்கு சவால்விடும் யூகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.
மக்களின் தீர்ப்பு மிகவும் புனிதமானது. அதில் எள்முனையளவு சந்தேகத்துக்கும் இடமளித்துவிட கூடாது.
நமது நாட்டின் உயரிய அமைப்புகளின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் இந்த அமைப்புகளின் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அவற்றில் பணியாற்றுபவர்கள் கையில்தான் உள்ளது.
தேர்தல் கமிஷன் என்னும் உயரிய அமைப்பின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் கமிஷன் பொறுப்பேற்க வேண்டும்.
அவர்கள் அவ்வாறு செய்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என தனது அறிக்கையில் பிரனாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவுகளை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு இயந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி இயந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.
மின்னணு இயந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

’வாக்காளர்களின் தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களை கவனித்து வருகிறேன். நமது ஜனநாயகத்தின் வேர்களுக்கு சவால்விடும் யூகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.
மக்களின் தீர்ப்பு மிகவும் புனிதமானது. அதில் எள்முனையளவு சந்தேகத்துக்கும் இடமளித்துவிட கூடாது.
நமது நாட்டின் உயரிய அமைப்புகளின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் இந்த அமைப்புகளின் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அவற்றில் பணியாற்றுபவர்கள் கையில்தான் உள்ளது.
தேர்தல் கமிஷன் என்னும் உயரிய அமைப்பின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் கமிஷன் பொறுப்பேற்க வேண்டும்.
அவர்கள் அவ்வாறு செய்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என தனது அறிக்கையில் பிரனாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம், ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு பன்முகத்தன்மையை கொண்டாட முடியாது என ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசினார். #RSS #PranabMukherjee
மும்பை:
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா இன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானதும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை அவருக்கு கடிதமாக எழுதியிருந்தனர்.
இந்நிலையில், சர்ச்சைகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் அவர் இன்று நாக்பூர் வந்தடைந்தார். ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.
பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் உடன் அவர் சிறிது நேரம் பேசினார். இதனை அடுத்து, உபச்சார விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்:-
சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தேசியவாதத்தை சீர்குலைப்பதாக உள்ளது. தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவையாகும். நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்க முடியாது
என குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கான பிரிவு உபச்சார விழா அடுத்த மாதம் 7-ம் தேதி நடக்க உள்ளது. இதில், கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரனாப் முகர்ஜியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், “ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்துள்ளது, பிரணாப் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இனி, அதை விவாதிப்பது பொருட்டல்ல. அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களின் சித்தாந்தத்தில் உள்ள தவறுகளை எடுத்துச்சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.






