என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சலசலப்புகள்-சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் இன்று உரையாற்றுகிறார் பிரணாப்
Byமாலை மலர்7 Jun 2018 4:26 AM GMT (Updated: 7 Jun 2018 4:26 AM GMT)
காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஆட்சேபம் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜி உரையாற்ற உள்ளார். #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரணாப் முகர்ஜிக்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கடிதம் எழுதியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்படி ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலையே நாக்பூர் வந்து சேர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை விழாவிற்கு செல்லும் அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி மற்றும் பிற தலைவர்களையும் பிரணாப் சந்திக்கலாம் என தெரிகிறது. #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை பிரணாப் முகர்ஜியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரணாப் முகர்ஜிக்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கடிதம் எழுதியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்படி ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
ஆனால், எதிர்ப்பு கடிதங்களுக்கு பதில் அளிக்காத பிரணாப் முகர்ஜி, தான் பேசவேண்டியதை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பேச உள்ளதாக கூறியிருக்கிறார். எனவே, இன்றைய விழாவில் பங்கேற்கும் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் குறித்து தனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலையே நாக்பூர் வந்து சேர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை விழாவிற்கு செல்லும் அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி மற்றும் பிற தலைவர்களையும் பிரணாப் சந்திக்கலாம் என தெரிகிறது. #RssTritiyaVarsh #PranabAtRSSEvent
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X