என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sharmistha mukherjee"
- இந்த விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
- அவர்களால் 40 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது.
காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும், முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகளுமான சர்மிஸ்தா முகர்ஜி ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தன்னை கேலி செய்வதாகவும், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கேவலமான மொழியை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில், "இந்த விவகாரத்தை ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஷிரிண்டே மற்றும் உங்களையும் டேக் செய்து உங்களது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். எனினும், இந்த கடிதத்தை எழுதும் வரையில், இது தொடர்பாக எனக்கு எந்த தகவலோ அல்லது, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. ஒரு பெண்ணாக இந்த விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்."
"தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பூஜ்ஜியமாகவே தெரிகிறது. அவர்களது சொந்த இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியே அவர்களால் (காங்கிரஸ்) 40 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என கூறுகிறார்."
"எனது கருத்தின்படி, ராகுல் காந்தி அல்லது அவரின் குடும்பத்தாரே காங்கிரஸ்-இன் முகமாக செயல்பட்டால் காங்கிரஸ்-க்கு எதிர்காலமே கிடையாது. அவர்களுக்கு புதிய முகம் தேவை, புதிய யோசனைகள் மற்றும் தலைமை இல்லாமல் எதுவுமே சாத்தியமாகாது," என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தில் 3 நாள் நடைபெறும் விழாவில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன்பு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தினர்.
மேலும் அவர் பா.ஜனதாவில் இணைந்ததாக வதந்தி பரவிய செய்தியாலும் கோபம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பா.ஜனதா இப்படி பொய்யான செய்திகளை பரப்பும். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும், தகவல்களையும் பா.ஜனதா பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) அளிக்கிறீர்கள். இதனால் பிரணாப் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்