என் மலர்
நீங்கள் தேடியது "Policeman Death"
- குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
- அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
செஞ்சி:
விழுப்புரம் அடுத்த வி. கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராமச்சந்திரன் (வயது 37). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெனித்தா (வயது 33) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனர். பெனித்தா செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் அவர்கள் கிருஷ்ணா புரத்தி லேயே குடும்பம் நடத்தி வந்தனர். குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் இன்று பணிக்கு திரும்புவதற்காக நேற்று இரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள முருங்கை மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து செஞ்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். செஞ்சி டி.எஸ்.பி. மனோகரன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
- கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்த புறவழிச்சாலையில் உள்ள ஈச்சனோடையில் கடந்த 4-ந்தேதி காலை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சாக்கு மூடை ஒன்று கிடந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது சாக்கு மூடையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுடன், ஒரு பெண்ணின் கால் வெளியே தெரியும் நிலையில் கிடந்தது. மேலும் சாக்கு மூட்டை முழுவதும் ரத்தக்கறையாகவும் காணப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த இந்திராணி (வயது 70) என்றும் தெரியவந்தது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலரான அவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில், வில்லாபுரம் மற்றும் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சந்தேகப்படும்படியான சந்திரசேகர் (50), அமர்நாத் (38) இருவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து நகைக்காக இந்திராணியை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தனர்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகிலேயே நேற்று மாலை பாதி எரிந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மனைவியின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட மலையரசன், மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அங்கு மனைவியின் சிகிச்சை தொடர்பான கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்துள்ளார். அதன் பிறகு அவர் என்ன ஆனார், எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தான் அவர் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனோடை பகுதியில் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார்.
- ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சேலம்:
சேலம் ஏற்காடு அடிவாரம் உள்ள கொண்டப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 59). போலீஸ்காரர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சேலம் அருகாமையில் உள்ள பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஹரிதாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு ஹரிதாசுக்கு அவசர வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஹரிதாஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த போலீஸ்காரர் ஹரிதாஸ் உடலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், சக போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

டெங்கு-பன்றி காய்ச்சலை தடுக்கும் பணியினை சுகாதார துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. மாதவரம் பகுதியில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியாகினர்.
இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மர்ம காய்ச்சலுக்கு திருமணமான 6 மாதத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி சாந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய் (வயது26). ஆவடி 13-வது பட்டாலியனில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களாக விஜய்க்கு காய்ச்சல் இருந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து கடந்த 26-ந்தேதி போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் விஜய்யை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் விஜய் பரிதாபமாக இறந்தார்.
பலியான விஜய்க்கு கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. அவருக்கு நர்மதா என்ற மனைவி உள்ளார். மர்ம காய்ச்சலுக்கு போலீஸ்காரர் விஜய் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்க்கு வந்திருந்த காய்ச்சல் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #MysteryFever #Death






